பிக் பாஸ் சீசன் 5 தற்போது முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. யார் டைட்டிலை வென்று 50 லட்ச ரூபாயை அள்ளி செல்ல இருக்கிறார்கள் என்பது குறித்தான சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
பிக் பாஸ் சீசன் 5:
விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக் பாஸ் சீசன் 5, 100 நாட்களை தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இன்னும் பிக் பாஸ் வீட்டில் ராஜு, பிரியங்கா, நிரூப், பாவனி, அமீர் ஆகிய 5 போட்டியாளர்கள் தொடர்ந்து விளையாடி கொண்டிருக்கின்றனர். இன்னும் சில தினங்களில் பைனல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களின் ஓட்டின் அடிப்படையில் பார்க்கும் போது ராஜு தான் அதிகமான ஓட்டுக்களை பெற்றுள்ளார். இதனால் ராஜு தான் பிக் பாஸ் சீசன் 5 டைட்டிலை தட்டி செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராஜுவுக்கு அடுத்தபடியாக பிரியங்கா தான் அதிக ஓட்டுக்களை பெற்றுள்ளார். அதனால் பிரியங்கா தான் ரன்னர் ஆக இருப்பார் என எதிர்பார்க்கப்டுகிறது. ஆனால் யார் இந்த 50 லட்சத்தை வெல்ல போவது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்