தென்னாபிரிக்காவில் நடைபெற்று வந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா – வங்கதேச அணிகள் மோதின. இதில் வங்கதேச அணி இந்தியாவை வீழ்த்தி முதல் முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றினர்.
இந்தியா மோசமான பேட்டிங்..!
வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்
டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச தீர்மானம் செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய ஜெய்ஸ்வால் (88) தவிர மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 47.2 ஓவர்களில் 177 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால் இலக்கு 170 ஆக 46 ஓவர்களுக்கு குறைக்கப்பட்டது. நிதானமாக ஆடிய வங்காளதேசம் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 42.1 ஓவர்களில் இலக்கை அடைந்து முதல் முறையாக உலககோப்பையையும் கைப்பற்றியது. இந்த உலகக்கோப்பையின் தொடர் நாயகனாக இந்திய வீரர் ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டார்.
பானிபூரி வியாபாரி டூ உலகக்கோப்பை ஆட்டநாயகன் விருது வரை – யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் சாதனைப் பயணம்..!
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
வெற்றி பெற்ற உற்சாகத்தில் மைதானத்திற்குள் ஓடி வந்த வங்கதேச வீரர்கள் கடுமையான வார்த்தைகளால் இந்திய வீரர்களை கேலி செய்ததால் இரு அணி வீரர்களுக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டது. மைதானத்தின் நடுவிலேயே மோதிக்கொண்ட இரு அணி வீரர்களையும் பயிற்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் உள்நுழைந்து சமாதானப்படுத்தி அனுப்பினார்.
யூடூப் சேனலில் தகவல்களைப் பெற இங்கே கிளிக்செய்யவும்
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |