பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் ஃபைனல் இன்று நடைபெறுகிறது. அதில் அதிகமான ஓட்டுகளை பெற்று பாலாஜி தன் முதல் பரிசை பெற்றுள்ளார் என சமூக வலை பக்கங்களை செய்தி வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் அல்டிமேட்
பிக் பாஸ் ஐந்து சீசன்களை கடந்து தற்போது பிக் பாஸ் அல்டிமேட் என்னும் நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 14 போட்டியாளர்கள் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதற்குப் பிறகு சில திரை பிரபலங்களும் பிக்பாஸ் அல்டிமேட் வீட்டிற்குள் என்ட்ரி ஆனர்.
இந்த போட்டியாளர்களில் பாலாஜி, நிரூப், தாமரை, ஜூலி, ரம்யா பாண்டியன் மற்றும் அபிராமி ஆகியோர் நேரடியாக பைனலுக்கு தேர்வாகியுள்ளனர். யார் முதல் பரிசு வெல்லப் போகிறார் என ரசிகர்கள் நீண்ட நாட்களாகவே காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் நிரூப் தான் முதல் பரிசை வெல்வார் என அதிகளவில் எதிர்பார்க்கப்பட்டது. இரண்டாம் இடத்தை தாமரைச்செல்வியும், மூன்றாம் இடத்தை பாலாஜியும், நான்காம் இடத்தை ரம்யா பாண்டியன் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிக ஓட்டுகளைப் பெற்று பாலாஜி தான் முதல் பரிசை பெற்றுள்ளார். ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் இரண்டாம் பரிசை பாலாஜி பெற்றார். தற்போது விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்று பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த பாலாஜி வந்த வேலையை முடித்துவிட்டு கிளம்பியுள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்