பாவனி சம்மதித்ததால் தான் அப்படி செய்தேன் – பிக் பாஸ் அமீர் பகிரங்க பேட்டி!!

0

பிக் பாஸ் வீட்டில் அமீர் பவானிக்கு முத்தம் கொடுத்த விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நாம் அனைவரும் அறிந்ததே. தற்போது அது குறித்து அமீரிடம் கேட்ட போது கட்டாயப்படுத்தி முத்தம் கொடுக்கவில்லை என்றும், இனிமேல் இதுகுறித்து யாரும் என்னிடம் கேட்க வேண்டாம் எனவும் கோவமாக கூறியுள்ளார்.

அமீர் மற்றும் பாவனி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் வைல்ட்கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்தவர் அமீர். அமீர் பிக் பாஸ் வீட்டில் இருந்த பாதி நேரத்தை பவானியுடன் தான் செலவிட்டார். இந்த நிலையில் பாவனிக்கு அமீர் முத்தம் கொடுத்தது சர்ச்சையை மேலும் அதிகப்படுத்தியது. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு அமீர் தனது சமீபத்திய பேட்டியில் இது குறித்து பேசியுள்ளார்.

அதாவது, “நான் பாவனியை கட்டாயப்படுத்தி முத்தம் கொடுக்கவில்லை. அவரின் சம்மத்தின் பேரில் மட்டுமே அது நடந்தது. அப்போது இருந்த காதல் உணர்வில் அவ்வாறு செய்துவிட்டேன். ஏன் இவ்வாறு முத்தம் கொடுத்த விஷயத்தை பெரிதாக்குகிறீர்கள். இனிமேல் யாரும் பாவனிக்கு முத்தம் கொடுத்த விஷயத்தை பற்றி என்னிடம் கேட்காதீர்கள். நானும் பாவனியும் இதுவரை நல்ல நண்பர்களாகவே பழகி வருகிறோம்” என கூறியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here