என்ன மனுஷன் யா… பிக் பாஸ் புகழ் ஆரி செய்த செயல்… குவியும் பாராட்டுக்கள்!!!

0

ரெட்டை சுழி படத்தின் மூலம் தன்னை ஒரு ஹீரோவாக அறிமுகப்படுத்தி கொண்டவர் ஆரி அர்ஜுனன். அதை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடிகராகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற பிக் பாஸில் கலந்து கொண்டு அதற்கான டைட்டில் வின்னர் பட்டத்தையும் கைப்பற்றியவர். தற்போது கொரோனா சூழலில் உணவின்றி தவிக்கும் 100 பேருக்கு தினமும் அன்னதானம் வழங்கி வருகிறார். அந்த வீடியோ வெளியாகி பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

தமிழ் சினிமாவில் நடிகர்களுள் ஒருவரானார் ஆரி அர்ஜுனன். அவருக்கு  தமிழில் முதல் படமாக அமைந்தது ரெட்டை சுழி. அதை தொடர்ந்து நெடுஞ்சாலை,மாயா உட்பட சில படங்கள் மூலம் தன் நடிப்பை வெளிப்படுத்தியவர். இதனிடையில் தான் சர்ச்சைக்கும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே ஒரு பக்கம் சர்ச்சை, ரொமான்ஸ் என இருந்தாலும் மறுபக்கம் பிரபலங்களின் உண்மை குணங்களும் வெளிப்படுகின்றன.

 

அந்தவகையில், ஆரி  அர்ஜுன் அவர்களின் உண்மை முகம் அந்த நிகழ்ச்சி மூலம் வெளிப்பட்டது. அந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் அறிவுரை கூறி  அனைவரின் ஆதரவு இழந்து  இருந்தாலும்,பின்னர் அவரின் செயல்கள் அனைவரையும் அவர் பக்கம் ஈர்த்தது என்றே கூறலாம். பெண்கள்களை மதிப்பது, அனைவரையும் அரவணைப்பது, அனைவருக்கும் உதவுவது ,தனது தனித்தன்மையை வெளிப்படுத்துவது என எல்லா வித நற்குணங்களையும் கொண்டிருந்தார்.இந்த பண்புகளே அவருக்கு இந்த வெற்றியை தேடி தந்தது. தற்போது திருவண்ணாமலை கிரிவல பாதையை சுற்றியுள்ள பகுதிகளில் கொரோனாவால்  உணவின்றி தவிப்போர்க்கு “மாறுவோம் மாற்றுவோம்”  என்ற அறக்கட்டளை மூலம்  தினமும் அன்னதானம் வழங்கி வருகிறார். அவரின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here