விஜய் தொலைக்காட்சியில் தற்போது “பாரதி கண்ணம்மா” மற்றும் “ராஜாராணி” சீரியலின் மெகா சங்கமம் நடைபெற்று வருகின்றது. இதனை அடுத்து இதில் ஒரு போட்டிக்காக தொகுப்பாளினி அர்ச்சனா கலந்து கொண்டுள்ளார். இதனால் ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர்.
மெகா சங்கமம்
விஜய் தொலைக்காட்சியில் டாப் ரேட்டிங்கில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான், ராஜராணி மற்றும் பாரதி கண்ணம்மா. இந்த இரு சீரியல்களின் மெகா சங்கமம் தற்போது நடந்து வருகின்றது. முன்னதாக, பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்யலஷ்மி சீரியலின் மெகா சங்கமம் நடைபெற்றது. இதனை அடுத்து தற்போது இந்த இரு சீரியல்களின் சங்கமம் நடைபெற்று வருகின்றது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்த மெகா சங்கமத்தில் பல ட்விஸ்டுகள் இருந்து வருகின்றனர். சௌந்தர்யா தனது மருமகளான கண்ணம்மாவை ரிசார்டிற்கு அழைத்து செல்கிறார். அதே போல் வெண்பா பாரதியின் மனதினை மாற்றி ரிசார்டிற்கு அழைத்து செல்கிறார். இதனால் பல பரபரப்பான திருப்பங்களுடன் இந்த இரு தொடர்களும் இருந்து வருகின்றது.
தமிழ்நாட்டு பொண்ணுங்களோட மாமியாரா?? வைரலாகும் அஸ்வின் அம்மாவின் புகைப்படம்!!
இந்த தொடரில் தற்போது ஒரு போட்டி நடைபெற இருக்கின்றது. இந்த போட்டியில் தொகுப்பாளராக அர்ச்சனா கலந்து கொள்கிறார். அர்ச்சனா அதிகபட்சமாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தான் தொகுப்பாளராக தான் இருந்து வந்தார். ஆனால், இவர் நடந்து முடிந்த பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பெரும் எரிச்சலையும் வெறுப்பினையும் சம்பாதித்தார்.
இவரை தற்போது விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் களமிறக்கியுள்ளது. தற்போது இவர் இந்த மெகா சங்கமத்தியிலும் கலந்து கொள்கிறார். இதனால் சிலர் கொஞ்சம் எரிச்சல் அடைந்துள்ளனர்.