கொரோனா அறிகுறி முன்னெச்சரிக்கை..மனைவியுடன் தன்னை தனிமைப்படுத்தி கொண்ட இந்திய கிரிக்கெட் அணி வீரர்!!!

0

கொரோனா அறிகுறி இருப்பதால் மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி இந்திய கிரிக்கெட் அணி வீரர் புவனேஷ்வர் குமார் மற்றும் அவரது மனைவியும் தங்களை வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டனர்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கொரோனா இரண்டாம் அலையால் சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள் உட்பட பலர் பாதிக்கப்பட்டனர். இதில் கிரிக்கெட் வீரர்களும் அடங்குவர். இந்திய கிரிக்கெட் வீரர்களான வருண் சக்ரவர்த்தி, சர்தீப் வாரியர் ஆகியோர்க்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.  ஐபிஎல் 14ஆவது சீசன் கொரோனா அச்சுறுத்தலால் ஒத்திவைக்கப்பட்டன.

 

இந்நிலையில் புவனேஷ்வர் குமார் மற்றும் அவரது மனைவிக்கும் கொரோனா அறிகுறிகள்  இருப்பதால் மருத்துவர்கள் அறிவுரையின்படி புவனேஷ்வர் குமாரும் அவரது மனைவியும் தங்களை வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டனர்.மே 21 அன்று அவரது  தாயாருக்கு தொற்று உறுதியானதை அடுத்து குடும்பத்தில் மற்றவர்களும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

கடந்த மாதம் தான் புவனேஷ்வரின் தந்தை கிரண் பால் சிங் கல்லீரல் புற்றுநோயால் காலமானார். தற்போது இவருக்கும், இவர் மனைவிக்கும் கொரோனா அறிகுறிகள் இருப்பதால் இவரது ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here