பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஃபரினா. இவர் தனது கணவருடன் சேர்ந்து பிரபல சீரியல் நடிகையான ரச்சித்தா உடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் எப்பொழுதும் டாப்பில் இருந்து வரும் ஒரு சீரியல். அந்த அளவுக்கு விருப்ப சீரியலாக அனைவரின் மனதையும் ஆட்கொண்டு வருகிறது. மேலும் இந்த சீரியலின் முக்கிய கதாபாத்திரங்கள் அனைத்தும் புதுமுகங்களே. எனினும் இந்த சாதனையை அந்த சீரியல் வாரந்தோறும் படைத்து வருகிறது.
தற்போது அந்த சீரியலில் கண்ணம்மாவின் இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை யார் என்று கண்ணம்மா தெரிந்து கொள்ள அவர் படும் கஷ்டங்கள் பார்ப்பவர்கள் அனைவரின் கண்ணையும் கலங்க வைக்கும். மேலும் இதில் வில்லியாக வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் மிரட்டி வருபவர் ஃபரினா.
இவர் தற்போது கர்ப்பம் தரித்து இருப்பதால் தன்னுடைய கர்ப்பகால புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். மேலும் இவருக்கு சமீபத்தில் வளைகாப்பு நிகழ்ச்சியும் நடந்துள்ளது. அந்த நிகழ்வின் புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வந்தது. இந்நிலையில் இவர் மற்றும் அவரின் கணவரும் விஜய் டிவியில் பிரபல சீரியல் நடிகையாக இருந்து வரும் ரச்சித்தா உடன் இணைந்து புகைப்படம் எடுத்து கொண்டு உள்ளனர்.
இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஃபரினா மற்றும் ரச்சித்தா இருவரும், ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பான நாச்சியார்புரம் என்ற சீரியலில் இணைந்து பணியாற்றி உள்ளனர். அதாவது ரச்சித்தா கதாநாயகியாகவும், அவரின் கணவர் தினேஷ் கதாநாயகனாகவும் நடித்த நாச்சியார்புரம் சீரியலில் ஃபரினா ஷோபா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்