பாரதி கண்ணம்மா சீசன் 2 சீரியலில் எலியும், பூனையுமாக இருந்த பாரதி, கண்ணம்மா இப்போது காதலிக்கின்றனர். இது வெண்பாவுக்கு பிடிக்காததால் இவர்களை பிரிக்க பல சதி வேலைகளை செய்கிறார். ஆனா இந்த விஷயம் சண்முகத்துக்கும், சௌந்தர்யாவுக்கும் தெரிந்தால் என்னாகும் என்று தெரியவில்லை. இந்நிலையில் இன்றைய எபிசோடு காண ப்ரோமோவில் சௌந்தர்யா சண்முகத்தையும் கண்ணம்மாவையும் வர சொல்கிறார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அப்போது பாரதி எதுக்கு என்று கேட்க சண்முகம் அவரது மூத்த மகள் கல்யாணத்திற்காக சம்பளத்திலிருந்து முன் பணம் கேட்டார் என்று சொல்ல அவர்கள் வந்து விடுகின்றனர். பின் சௌந்தர்யா பாரதியிடம் இந்த பணத்தை நீயே கொடு என்று சொல்ல அவரும் கொடுக்கிறது. அடுத்ததாக வெளியே வரும் சண்முகம், கண்ணம்மாவிடம் சௌந்தர்யா மேடம் நம்மளுடைய நிலைமையை புரிந்து கொண்டு எனக்கு இவ்வளவு உதவி பண்றாங்க. அவங்களுக்கு நம்ம ஒரு நாளும் துரோகம் நினைச்சிரக்கூடாது.
கண்ணம்மா நீ பாரதியுடன் பழகு நான் வேணாம்னு சொல்லல. ஆனா அது எல்லையை மட்டும் தாண்டி போயிடக் கூடாது என எச்சரிக்கிறார். இதை கேட்டு கண்ணம்மா ஷாக்காக பின் தன் தோழி புகைப்படத்தை பார்த்து உன் குடும்பத்திற்கு என்னால எந்த கெட்ட பேரும் வராது என்று சொல்லி அழுகிறார். இத்துடன் ப்ரோமோ முடிவடைகிறது