என் குழந்தையை என்கிட்ட இருந்து பிரிச்சு தூக்கிட்டு போனது யார்? என் குழந்தை எங்கே?? சௌந்தர்யாவிடம் சரமாரியாக கேள்விகள் கேட்கும் கண்ணம்மா!!! 

0

தமிழ் சீரியல்கள் வரிசையில் முதல் இடத்தில் இருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் இன்று, டாக்டர் மூலம் தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததை அறிந்து கொள்ளும் கண்ணம்மா, சௌந்தர்யாவிடம் சரமாரியாக கேள்விகளை கேட்கிறார்.

பாரதி கண்ணம்மா சீரியல்

பாரதி கண்ணம்மா சீரியலில் , கண்ணம்மா தனக்கு தலைசுற்றல் ஏற்பட்டதால், தான் வழக்கமாக செல்லும் டாக்டரிடம் செல்கிறார். இந்நிலையில் இன்று, மருத்துவமனையில் கண்ணம்மாவை டாக்டர் பரிசோதித்திக்கிறார். அப்பொழுது என்ன வேலை பாக்குறீங்க என்று கேட்க, தான் பார்க்கும் வேலைகளை கூறுகிறார் கண்ணம்மா.

அதை கேட்ட டாக்டர் வேலை முக்கியம் தான் ஆனால் உங்களின் உடம்பும் ரொம்ப  முக்கியம் என சொல்லி சத்து மருந்துகளை  எழுதிக் கொடுக்கிறார். மேலும் உங்களின் பெயர் என்ன என்று கேட்க அதற்கு கண்ணம்மா என்று சொல்ல அதை கேட்ட டாக்டர், உங்களின் மாமியார் பெயர் சௌந்தர்யா தானே என்று கேட்கிறார். அதற்கு ஆமாம் என்று சொல்ல உடனே டாக்டர் உங்களின் குழந்தைகள் எப்படி உள்ளார்கள் என்று டாக்டர் கேட்க அதற்கு கண்ணம்மா எனக்கு ஒரே ஒரு பொண்ணு தான் என்று கூறுகிறார்.

உடனே டாக்டர் இல்லவே இல்லை உங்களுக்கு இரட்டை குழந்தை தான் அதுவும் இரண்டும் பெண் குழந்தைகள்  உங்க ஸ்கேன் ரிப்போர்ட் பார்த்ததே நான் தான் என்று கூறுகிறார். இதை கேட்ட கண்ணம்மா குழப்பத்தில் தவிக்கிறார். அதன் பின்  டாக்டர் ரூமை விட்டு வெளியே வந்து தன்னுடைய பழைய நினைவுகளை யோசித்துக் கொண்டிருக்கிறார்.

அந்த தருணத்தில் டாக்டர் பொய் சொல்லவில்லை என்பதை புரிந்து கொண்டு, அந்த நேரத்தில் தன் உடன் சௌந்தர்யா இருந்தாக டாக்டர் கூறியதை நினைவில் வைத்துக் கொண்டு தன் மாமியாருக்கு போன் செய்கிறார் கண்ணம்மா. போனை எடுத்த சௌந்தர்யா லக்ஷ்மியை பற்றி தான் கேட்க போகிறார் என்று நினைத்து அவரை பற்றி சொல்கிறார்.

அப்பொழுது குறுக்கிடும் கண்ணம்மா, தான் கேட்கும் கேள்விக்கு என் மீது சாத்தியமாக உண்மையை மட்டும் தான் சொல்ல வேண்டும் என கூறுகிறார்.  அப்பொழுது கண்ணம்மா சௌந்தர்யாவிடம், எனக்கு ஒரே பிரசவத்தில் இரண்டு குழந்தைகள் பிறந்ததா?? என கேட்கிறார். மேலும் உங்களுக்கு உண்மை தெரியும் என்று எனக்கு தெரியும், என் குழந்தையை என்கிட்ட இருந்து பிரிச்சு தூக்கிட்டு போனது யார்? என் குழந்தை எங்கே? என சரமாரியாக கேள்விகளை கேட்கிறார்.

அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் அழுதபடியே உள்ளார் சௌந்தர்யா. மேலும் போன் சரியாக கேட்கவில்லை என கூறி சமாளித்து போனை அணைத்து விடுகிறார் சௌந்தர்யா. அதன் பிறகு சௌந்தர்யாவிடம், வேணு கோபால கிருஷ்ணன் என்னாச்சு என்று கேட்கிறார். அதற்கு சௌந்தர்யா கண்ணம்மா கேட்டதை பற்றி கூறுகிறார்.மேலும் 8 வருடத்திற்கு முன்னர் நடந்த அனைத்து விவரங்களையும் கூறுகிறார்.

மேலும்  பாரதி தான் கண்ணம்மாவின் முதல் குழந்தைக்கு பிரசவம் பார்த்ததாகவும், இன்னொரு குழந்தைக்கு தான் பிரசவம் பார்த்ததாகவும் கூறுகிறார் சௌந்தர்யா. மேலும் பாரதி மற்றும் கண்ணம்மா நாளடைவில் இணைய இந்த குழந்தை உறுதுணையாக இருக்கும் என்று எண்ணி தான் தூக்கி வந்ததாகவும் கூறுகிறார். இவ்வாறு இருவரும் வருத்தத்துடன் பேசிக்கொண்டு உள்ளனர். இப்படி இன்றைய கதைக்களம் முடிகிறது .

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here