பாரதி கண்ணம்மா சீரியலில் இப்பொழுது பாரதிக்கு தலையில் அடிபட்டதால், பழசு அனைத்துமே மறந்து போய்விட்டது. கண்ணம்மா, கண்ணம்மா என்று புலம்பி கொண்டிருக்கும் சூழ்நிலையில் மருத்துவர்கள் நேரில் அவரை வர சொல்கின்றனர். ஆனால் நேரில் கண்ணம்மாவை பாரதிக்கு சுத்தமாகவே அடையாளம் தெரியவில்லை.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சியாகிறது. மேலும் கண்ணம்மா அவருடன் நெருங்கி பழகினால் தான் அவர் குணமடைவார் என்று சொல்ல கண்ணம்மா அதற்கு ஒத்துக் கொள்ளவே இல்லை. மேலும் சீரியல் இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளது. இன்னும் கொஞ்ச நாளிலேயே சீரியல் முடிவடைய இருப்பதால் இந்த சீரியலுக்கு பதில் களமிறங்க போகும் சீரியல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அடக்கடவுளே.., துணிவு படத்துக்காக மேலும் ஒரு நபர் மரணம்.., தூத்துக்குடியில் நடந்த சம்பவம்!!
அதாவது, பிரவீன் பென்னட் புதிய சீரியல் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த சீரியல் குறித்து முக்கிய அப்டேட் சமீபத்தில் தான் வெளியானது. பாரதி கண்ணம்மா சீரியல் பிப்ரவரி 10 ஆம் தேதிக்குள் முடிவடையும் என்றும் அதன் பிறகு அந்த நேரத்தில், பிரவீன் பென்னட்டின் இந்த புதிய சீரியல் களமிறங்கும் என்றும் செய்திகள் வைரலாகி வருகிறது. எப்படியோ டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட் உண்மை தெரிந்து சீரியல் முடிவுக்கு வந்து விட்டதே என்று ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.