பல வருட போராட்டத்திற்கு பிறகு DNA  டெஸ்ட் மூலம்  உறுதியான குழந்தையின் தந்தை…!பாரதி கண்ணம்மா சீரியலை மிஞ்சிய ரியல் சம்பவம்!!!

0

உண்மை சம்பவங்களை தழுவிய படங்கள் மற்றும் சீரியல்கள் பல உள்ளன. அந்த வகையில் விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியல் கண்ணம்மாவின் வாழ்க்கையை ஒரு சில மாறுதல்களுடன் பிரதிபலிக்கிறது சென்னையை சேர்ந்த இளவரசியின் வாழ்க்கை. 46 வருட போராட்டத்திற்கு பிறகு DNA சோதனை மூலம் தன்னுடைய குழந்தையின் தந்தையை உறுதி செய்து உள்ளார் இந்த தாய்.

விஜய் டிவியில் வரும் பாரதி கண்ணம்மா சீரியல், பாரதி தனக்கு குறை இருப்பதால் குழந்தை பிறக்காது என நினைத்து இருந்த வேளையில், அவரின் மனைவி கண்ணம்மா கர்ப்பம் தரிக்க இதனால் கோபமடைந்து பிரிவை சந்திக்கின்றனர். அதன் பிறகு தற்போது வரை அந்த DNA டெஸ்ட் எடுப்பது பற்றிய கதையாக சீரியல் நகர்கிறது. இதே போல் ஒரு சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

அதாவது சென்னையை சேர்ந்த இளவரசி மற்றும் விஜய கோபாலன் இருவரும் 1975ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் இணைந்து 7 மாதங்கள் மட்டும் வாழ்ந்து வந்த நிலையில் வெளியூர் வேலைக்கு செல்வதாக சொல்லி சென்று உள்ளார். இதனிடையே இளவரசி கர்ப்பம் தரித்து உள்ளார். அதன் பிறகு தன்னுடைய கணவரிடம் இருந்து எந்தவித தொடர்பும் இல்லாமல் போக, 10 ஆண்டுகளுக்கு பிறகு  அவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு காவல் துறையில் பணி புரிவதாக தெரிய வந்துள்ளது.

இதையடுத்து இளவரசி போலீஸ் புகார் தெரிவிக்க, அவரை விசாரித்த போது இளவரசி மற்றும் அவரின் பெண் குழந்தை இருவரையும் யாரு என்று தெரியாது எனவும் அந்த பெண் குழந்தை தனக்கு பிறக்கவில்லை உணவு தெரிவித்து உள்ளார். அதன் பிறகு 46 ஆண்டு கால போராட்டத்தின் முடிவில் DNA  டெஸ்ட் மூலம் விஜய கோபாலன் தான் குழந்தையின் தந்தை என்பதை நிரூபித்தார் இளவரசி. இதன் அடிப்படையில் விஜய கோபாலன் தேடி வருகின்றார் போலீஸ். மேலும்  இந்த சம்பவம் மூலம் நிகழ் உலகிலும் ஒரு கண்ணம்மாவாக வலம் வருகிறார் 65 வயது இளவரசி.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here