விஜய் டிவியில் நொடிக்கு நொடி பரப்பரப்புடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலின் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததை டாக்டர் மூலம் அறிந்து கொள்ளும் கண்ணம்மா இது குறித்த உண்மையைக் கூறும்மாறு சௌந்தர்யாவிடம் கேட்கிறார்.
பாரதி கண்ணம்மா சீரியல்
பாரதி கண்ணம்மா சீரியல் நாயகி கண்ணம்மா ஹேமா தனக்கு பிறந்த குழந்தை தான் என்று தெரியாமலே அவளின் மீது அன்பு பாராட்டி வருகிறார். அதே போன்று தான் பாரதியும் ஹேமா மற்றும் லட்சுமி இருவரும் தன்னுடைய பிள்ளைகள் தான் என்று தெரியாமலேயே பாசம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் வெளியான அந்த சீரியல் ப்ரோமோவில் கண்ணம்மாவுக்கு தலைசுற்றல் ஏற்படுகிறது. இதனால் தான் வழக்கம் செல்லும் டாக்டரிடம் சிகிச்சைக்காக செல்கிறார்.
அவரை சோதனை செய்த பிறகு டாக்டர் , கண்ணம்மாவிடம் உன்னுடைய பெயர் என்ன என்று கேட்கிறார். மேலும் அவரின் பெயர் கண்ணம்மா என்பதையும் அவரின் மாமியார் பெயர் சௌந்தர்யா என்பதையும் அறிந்த டாக்டர் கண்ணம்மாவை நோக்கி உங்கள் குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள் என கேட்கிறார்.
அப்போது எனக்கு ஒரே ஒரு பொண்ணு மட்டும் தான் இருக்கிறார் என்று சொல்கிறார் கண்ணம்மா. அதை மறுக்கும் டாக்டர், உனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருக்கும். உன்னுடைய ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்ததே நான் தான். நீ உங்க மாமியார் கிட்ட கேளு என கூறுகிறார். இதை கேட்டு அதிர்ந்த கண்ணம்மா டாக்டர் ரூம் விட்டு வெளியே வந்து சௌந்தர்யாவுக்கு போன் செய்து , நான் கேட்டும் கேள்விக்கு உண்மையை மட்டும் தான் சொல்ல வேண்டும் என கூறி, எனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததா? என கேட்கிறார்.
அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த படி உள்ளார் சௌந்தர்யா. இவ்வாறாக அந்த ப்ரோமோ முடிவடைகிறது. இந்நிலையில் சௌந்தர்யா உண்மையை சொல்வாரா ? அல்லது என்ன செய்யப்போகிறார் என்பது இனி வரும் எபிசோடுகள் மூலம் தெரிய வரும் பொறுத்திருந்து காண்போம்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்