பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது வெண்பா கர்ப்பமாக இருக்கும் நிலையில் தற்போது பாரதியிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி கெஞ்சுகிறார். யாரோ தனக்கு கூல் ட்ரிங்க்ஸில் மருந்து கலந்து கொடுத்து கற்பழித்து விட்டதாகவும் அதனால் தான் இந்த குழந்தை உருவனத்தையும் சொல்கிறார் வெண்பா.
நீ ஒரு தாலி மட்டும் கட்டு கண்டிப்பாக நான் எங்கயாச்சும் போயிடுவேன் உன் கண்ணுலையே படமாட்டேன் என்று சொல்கிறார் வெண்பா. பாரதி இதற்கு ஒத்து கொள்ளாததால் தற்போது புதிய பிளானில் இறங்கி விட்டார். அதாவது விஷயத்தை குடித்து மிரட்டி வருகிறார். இதனால் பாரதி மனம் இறங்குவாரா?? இல்லையா?? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்நிலையில் அடுத்து என்ன நடக்க போகிறது என்ற அப்டேட் வெளியாகவுள்ளது. அதாவது பாரதி கண்ணம்மா சீரியல் கூடிய விரைவில் முடிவடைவதற்கான அறிகுறி தான் இது. அதாவது இப்பொழுது பாரதி கண்டிப்பாக இந்த விசயத்திற்கு ஒத்துக்கொள்ள மாட்டாராம். மேலும் கண்ணம்மாவை பற்றிய உண்மையும் இந்த வேளையில் தான் வெளியாகுமாம்.
அதாவது கண்ணம்மா உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் நிலையில் ஹாஸ்பிடலில் சேர்க்க அப்பொழுது ஹேமாவின் டிஎன்ஏ ரிப்போர்ட் அவர் கண்ணில் பட்டுவிடுமாம். உண்மை தெரிந்த பாரதி கதறி அழுக ஆரம்பித்து விடுவாராம். அடுத்து வெண்பா இந்த குழந்தைக்கு பாரதி தான் காரணம் என்று சொல்லி அவரை மிரட்ட ஆரம்பித்து விடுவாராம்.