பாரதி கண்ணம்மாவில், பாரதிக்கு தெரியாமல் அஞ்சலி ஹேமா, கண்ணம்மா வீட்டிற்கு வந்து 2 நாட்கள் தங்கி விடுகின்றனர். இந்த விஷயம் பாரதிக்கு தெரிந்தால் என்ன பிரளயம் வெடிக்கும் என பரபரப்புடன் சீரியல் நகர்ந்து கொண்டிருக்கிறது.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா இன்றைய எபிசோடில் அஞ்சலியிடம் கர்ப காலத்தின் போது மாத்திரைகள் போடுவது பற்றி கண்ணம்மா விசாரிக்க, அப்பொழுது அஞ்சலி வெண்பா, பாரதி கொடுத்ததாக சொன்ன மருந்து சீட்டை காட்ட கண்ணம்மா இது பாரதி கையெழுத்து இல்லை என உறுதியாக சொல்கிறார். இதன் மூலம் வெண்பா ஏதோ சதி செய்யும் விஷயத்தை அஞ்சலி அறிந்து கொள்கிறார்.
பின்னர் சௌந்தர்யாவும் வேணுவும் கண்ணம்மா ஹேமாவை அனுப்ப மறுத்ததால் புலம்பி பேசிக்கொண்டிருக்கின்றனர். இருப்பினும் வேணு கண்ணம்மாக்கு நம்ம நிலைமை தெரியும் அவ அனுப்பிடுவா என தைரியம் சொல்கிறார்.
பின்னர் இரவு அனைவரும் தூங்க தயாராகி கொண்டிருக்கின்றனர். அஞ்சலியை மட்டும் உள்ளே படுக்கச்சொல்லிலிவிட்டு மற்ற அனைவரும் வெளியே படுகின்றனர். கண்ணம்மா கதை சொல்லிக்கொண்டே ஹேமா, லட்சுமியை தூங்க வைக்கிறார்.
அதை தொடர்ந்து காலை பாரதி தன் வீட்டில் ஹேமா இல்லாமல் புலம்பி தள்ளிக்கொண்டிருக்கிறார். மேலும் நாளை அஞ்சலி வீட்டிற்கு சென்று ஹேமாவை கையோடு கூட்டி வரவேண்டும் என நினைக்கிறார். இதோடு இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோடு முடிகிறது.
பாரதிக்கு குடும்பமே தன்னை ஏமாற்றும் விஷயம் தெரிந்தால் என்ன நடக்கும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்