பாரதி கண்ணம்மாவில், சௌந்தர்யா குடும்பம் பாரதிக்கு தெரியாமல் ஹேமாவை அஞ்சலியுடன் கண்ணம்மா வீட்டிற்கு அனுப்பி வைக்கின்றனர். இது பாரதிக்கு தெரிந்தால் பூகம்பம் நிகழும் என்பது மட்டும் உறுதி.
பாரதி கண்ணம்மா:
இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோடில் ஹேமா தன் வீட்டிற்கு வந்திருப்பதை முதலில் கனவு என்று கண்ணம்மா நினைக்க, அஞ்சலியை பார்த்ததும் தான் அது உண்மை என்று புரிகிறது. மேலும் 2 நாட்கள் தங்கிவிட்டு செல்வதாக சொல்கின்றனர்.
இதை கேட்டு கண்ணம்மா, ஹேமா மேலும் மகிழ்ச்சி அடைகின்றனர். அந்த நேரம் பார்த்து பாரதி கால் செய்ய அஞ்சலி பொய் சொல்லி சமாளிக்கிறார். பின்னர் ஸ்வீட் செய்ய போவதாக கண்ணம்மா சொல்ல, அஞ்சலி டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம் என்று சொல்லி ஆன்லைனில் ஆர்டர் செய்கிறார்.
பின்னர் அனைவரும் சேர்ந்து சீட்டு விளையாடுகின்றனர். சந்தோஷமாக சேர்ந்து சாப்பிட்டு மகிழ்கின்றனர். பின்னர் சௌந்தர்யாவும் வேணுவும் கண்ணம்மாவுக்கு கால் செய்து விசாரித்து விட்டு 2,3 நாட்களில் ஹேமாவை அனுப்பும்மாறு கேக்க ஆத்திரமடையும் கண்ணம்மா எனக்கு எப்போ தோனுதோ அப்போதான் அனுப்புவேன் என்று கோவமாக சொல்கிறார்.
அதை தொடர்ந்து இரவு வீட்டிற்கு வரும் பாரதி ஹேமா என்று அழைத்து கொண்டே வர பின்னர் தான் அஞ்சலியுடன் ஹேமா சென்று இருப்பதை உணர்ந்து ஹேமாவை மிகவும் மிஸ் செய்கிறார். இதோடு இன்றைய பாரதி கண்ணம்மா முடிவடைகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்