பாரதி கண்ணம்மாவில், சௌந்தர்யா குடும்பம் ஹேமாவை கண்ணம்மாவுடன் சேர்த்து வைக்க புது திட்டம் ஒன்றை திட்டியுள்ளது.
பாரதி கண்ணம்மா:
இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோடில் சௌந்தர்யா, கண்ணம்மா ஹேமாவை நினைத்து படாதபாடு படுவதை குடும்பத்திடம் சொல்லி புலம்புகிறார். அதற்கு அஞ்சலி என் அம்மா வீட்டில் இரண்டு நாட்கள் தங்குவதாக சொல்லி கண்ணம்மா வீட்டிற்கு ஹேமாவை கூட்டி செல்வதாக கூறுகிறார்.
பின்னர் அங்கு வரும் பாரதி இவர்கள் போட்ட பிளான் தெரியாமல் அஞ்சலி அம்மா வீடு தானே என 2 நாட்கள் தங்கிவிட்டு வரும்படி சொல்கிறார். மேலும் தானே வந்து ட்ராப் செய்வதாக கூற அஞ்சலி முழிக்கிறார். மறுபுறம் அங்கு கண்ணம்மாவுக்கு எங்கு பார்த்தாலும் ஹேமா நிற்பது போல் தெரிகிறது.
போதாத குறைக்கு லட்சுமி வேறு,, விளையாட எனக்கு யாரும் இல்லை என புலம்பி கொண்டுள்ளார். அதை தொடர்ந்து பாரதி, ஹேமா மற்றும் அஞ்சலியை அவர் அம்மா வீட்டிற்கு அழைத்து செல்கிறார். அந்த சமயம் பாரதிக்கு ஹாஸ்பிடலில் இருந்து ஒரு முக்கிய கால் வர நல்ல நேரமாக கால் டாக்சியில் இருவரையும் பாரதி ஏற்றிவிட்டு செல்கிறார்.
பின்னர் ஹேமாவே சமையல் அம்மா வீட்டிற்கு செல்லலாம் என்று சொல்ல அஞ்சலி இதுதான் சாக்கு என்று ஹேமாவை கண்ணம்மா வீட்டிற்கு கூட்டி கொண்டு செல்கிறார். கண்ணம்மா இதுவும் கற்பனை என்று நினைக்க பின்னர் அஞ்சலியை பார்த்ததும் இது உண்மை என்று மகிழ்ச்சி அடைகிறார். இதோடு இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோடு முடிகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்