சௌந்தர்யா ஹேமாவை ஒப்படைக்க கண்ணம்மா நான்கு நாட்கள் கெடுவை கொடுத்துள்ளார். இதனால் 4 நாட்கள் முடிவில் என்ன நடக்கும் என சீரியல் தற்போது விறுவிறுப்புடன் நகர்ந்து கொண்டுள்ளது.
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மாவின் இன்றைய எபிசோடில் கண்ணம்மா, ஹேமா எப்பொழுது தன்னிடம் வந்து சேர்வார் என்ற எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டுள்ளார். மேலும் ஹேமா அந்நேரம் தன்னை பார்க்க வருவது போல் கனவு வேறு காண்கிறார். அதே சமயம் சௌந்தர்யாவிடம் பாரதி கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டுள்ளார்.
உன் சந்தேக புத்தினால தான் உனக்கு நாங்கள் பொய் சொல்வது போல தோணுது என சௌந்தர்யா சமாளிக்கிறார். மேலும் ஹேமா தன்னை விட்டு சென்றால் உயிரை விட்டுவிடுவேன் என பாரதி மிரட்ட சௌந்தர்யா ஆடி போகிறார். அதை தொடர்ந்து வெண்பாவிற்கு கண்ணம்மா கனவில் வந்து பயமுறுத்துகிறார். கண்ணம்மா கழுத்தை நெரிப்பது போல் வெண்பாவே தன் கழுத்தை தானே நெரித்துக்கொண்டுள்ளார்.
பின்னர் நிதானத்திற்கு வந்து வேலைக்கார பெண் சாந்தியை வெளுக்கிறார் வெண்பா. பின்னர் மறுநாள் காலை கண்ணம்மா கோவிலுக்கு செல்வதற்காக கால் டாக்ஸி புக் செய்கிறார். இதை பார்த்து லட்சுமியை ஆச்சரியப்படுகிறார். மேலும் ஹேமாவையும் போற வழியில் அழைத்து செல்வதாக கண்ணம்மா கூறுகிறார்.
லட்சுமியும் இதனால் சந்தோசப்படுகிறார். இவ்வாறு மகிழ்ச்சியுடன் இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோடு முடிகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்