பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது கண்ணம்மா தனக்கு பிறந்த குழந்தையை பற்றி யோசித்துக்கொண்டுள்ளார். அடுத்ததாக வெண்பா சௌந்தர்யாவின் மாஸ்டர் பிளானை நினைத்து கோவமடைகிறார்.
பாரதி கண்ணம்மா
பாரதியையும் கண்ணம்மாவையும் சேர்த்து வைப்பதற்காக சௌந்தர்யா செய்த அனைத்து வேலைகளும் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளியாகி வருகிறது. கண்ணம்மாவிற்கு தனக்கு இரட்டை குழந்தை பிறந்தது உண்மை தான் என்ற விஷயமும் தெரிய வருகிறது.
ஏனெனில் இந்த விஷயத்தை பற்றி எல்லோரும் தெரியாது என்று தான் சொல்கின்றனர். ஆனால் இது உண்மை கிடையாது என்று யாரும் அடித்து சொல்லவில்லை, அப்படி என்றால் கண்டிப்பாக இது உண்மை தான் என்று யோசிக்கிறார் கண்ணம்மா. மேலும் ஆட்டோ டிரைவர் குமாருக்கே லட்சுமியின் அப்பா பாரதி தான் என்று தெரிகிறது என்றால் இனி கண்டிப்பாக லக்ஷ்மிக்கு சந்தேகம் வரும் என்று நினைத்து கொள்கிறார்.
எல்லாரிடமும் என் குழந்தையை பற்றி கேட்டாச்சு ஆனால் இன்னும் வெண்பா கிட்ட மட்டும் கேட்கவே இல்லை என்று கண்ணம்மாவிற்கு நியாபகத்திற்கு வருகிறது. மேலும் வெண்பாவை காட்ட இத்தனை நாள் சௌந்தர்யா நம்மை எப்படி ஏமாற்றியுள்ளார் என்று கோவமடைகிறார்.
சாந்தியிடம் நடந்தவற்றை சொல்ல அவருக்கும் இது பெரிய ஷாக் தான். அடுத்ததாக ஹேமா மற்றும் அகிலன் லக்ஷ்மிக்காக வாங்கிய டிரஸ்ஸை கொடுக்க செல்கின்றனர். பாரதி ஆரம்பத்தில் போக கூடாது என்று தடுக்கிறார். அடுத்ததாக சௌந்தர்யா போக வேண்டாம் என்று தடுக்க பாரதி ஹேமாவை போக சொல்கிறார்.
இது சௌந்தர்யாவிற்கு குழப்பமாக உள்ளது. கடைசியில் பாரதி ஹேமா விருப்பப்பட்டதை செய்யட்டும் என்று சொல்கிறார். அஞ்சலிக்கு குறிபார்த்த பெண் மீண்டும் வந்து அஞ்சலிக்கு பரிகாரத்தை செய்யும்படி சொல்லிவிட்டு செல்கிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்