விஜய் டிவியின் டிஆர்பி தற்போது டாப் ரேஞ்சில் உள்ளது. ஏனெனில் பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது பல பரபரப்பான கட்டங்களுடன் போயிக்கொண்டுள்ளது. மேலும் பிக்பாஸ் வேறு தொடங்க உள்ளது. இதற்கிடையில் பல தொடர்கள் முடிவடைந்து வருகின்றன. இதனால் பாரதி கண்ணம்மா சில மாதங்களாக 1 மணி நேர தொடராக ஒளிபரப்பாகி வருகிறது. இப்பொழுது பாரதி கண்ணம்மா ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.
பாரதி கண்ணம்மா
ஆரம்பத்தில் ஒரு சராசரி குடும்பத்தில் நடந்து வரும் காதல், குடும்ப பிரச்சனைகள் போன்றவற்றை மட்டும் காட்டி வந்த பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது யாரும் எதிர்பார்த்திராத வண்ணம் பல திருப்பங்கள் நடந்து வருகின்றன. இது வரை நாம் பார்த்த சீரியல்களில் நாயகன் நாயகியை சேர்த்து வைத்து தான் பார்த்திருக்கிறோம்.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
ஆனால் இது முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தை பெற்றுள்ளது. பாரதி கண்ணம்மாவை பிரிப்பதற்கென்றே சதி செய்து வரும் வெண்பா இவர்கள் இந்த அளவிற்கு பிரிந்தும் வெறி அடங்காமல் பல வேலைகளை பார்த்து வருகிறார்.
அடுத்ததடுத்து என்ன நடக்கும் என்பதை யூகிக்க முடியாத அளவிற்கு பாரதி கண்ணம்மா சீரியல் போய்க்கொண்டுள்ளது. மேலும் சமூக வலைத்தளங்களில் வீட்டை விட்டு வெளியேறும் கண்ணம்மா என்று மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர். தற்போது பாரதி கண்ணம்மா சீரியல் ப்ரோமோ வெளியாகி உள்ளது.
ஏற்கனவே கோவத்தில் இருக்கும் பாரதியிடம் வெண்பா போன் செய்து கண்ணம்மா வருண் உடன் சந்தோசமாக இருப்பதாக கதைக்கட்டி விடுகிறார். இதனை நம்பி பாரதி மேலும் கோபமடைந்து குடிக்க ஆரம்பிக்கிறார். குடித்து விட்டு கார் ஒட்டி மரத்தில் மோதி காரை விட்டு வெளியே வரும்போது கண்ணம்மாவை பார்க்கிறார் பாரதி.
கோபமடைந்து போதையில் வயிற்றில் வளரும் குழந்தைக்கு வருண் தான் காரணம் என்று கூறுகிறார். கண்ணம்மா அவரின் சட்டையை பிடித்து வருண் தனக்கு அண்ணன் மாதிரி என்று கோவமடைகிறார். உண்மையை கூறவந்த வெண்பாவின் சித்தப்பாவையும் வெண்பா கடத்தி விட்டார்.
எப்படி உண்மை வெளிவரும். யார் மூலம் வெளிவரும். உண்மை தெரிய வரும்போது கண்ணம்மா பாரதியை மன்னிப்பாரா?? இவ்வாறு மக்கள் பலர் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர். இதனை வரும் எபிசோட்களில் பொறுத்திருந்து பாப்போம்.