பாரதியின் சுயரூபத்தை பார்த்து வாயடைத்து போன சௌந்தர்யா குடும்பம்.. பல ட்விட்ஸ்களுடன் இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோடு!!

0

பாரதி, கண்ணம்மா தவறு செய்யவில்லையோ என நினைத்து தன் குடும்பத்திடம் புலம்புகிறார். இதனால் மீண்டும் பாரதியும் கண்ணம்மாவும் ஒன்றிணைவர்களா என்று பல எதிர்பார்ப்புகளுடன் பாரதி கண்ணம்மா சீரியல்  வெளியாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா:

இன்றைய எபிசோடில் நாயகன் பாரதி, தன் குடும்பத்தினரிடம் நீங்கள் சொல்வதை கேக்காமல் சந்தேகப்பட்டு தவறு செய்து விட்டேன் என்று தேம்பி தேம்பி அழுகிறார். இதனால் அவருக்கு வேணு ஆறுதல் சொல்கிறார். சௌந்தர்யா, ஒன்னு இல்ல.. இரண்டு இல்ல.. எட்டு வருஷம் கண்ணம்மா எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பா..என பாரதியை திட்டுகிறார்.

அப்பொழுது தான் பாரதி தன் சுய ரூபத்தை காட்டுகிறார். அழுவதை நிறுத்திவிட்டு கைகொட்டி சிரிக்கிறார். நான் அப்படி பேசுனா உங்க ரியாக்ஷன் எப்படி இருக்கும்னு பாத்தேன். கண்ணம்மாவ நான் எப்பொழுதும் மன்னிக்கமாட்டேன் என்று கூற குடும்பமே அதிர்ச்சியாகிறது.

பின்னர் கண்ணம்மா தன் இரண்டாம் மகளை பற்றி நினைத்து மனம் வேதனை அடைகிறார். வெண்பாவை பற்றி  போலீசில் புகார் அளிப்பது ஒன்றே தன் மகளை காப்பாற்றும் வழி என்று காவல் நிலையத்திற்கு போனை வீட்டிலேயே வைத்து விட்டு புறப்படுகிறார். ஆனால் லட்சுமி மூலம் வெண்பா, கண்ணம்மா போலீஸ் ஸ்டேஷன்க்கு செல்வதை அறிந்து கொள்கிறார்.

கண்ணம்மா போலீஸ் ஸ்டேஷனிற்குள் செல்லும் சமயம் ஆட்டோக்காரர் குமார் போன் மூலம் வெண்பா கால் செய்து மிரட்டுகிறார். மேலும் கூவத்தில் உள்ள ஒரு குழந்தையை கண்ணம்மாவின் குழந்தை என்று சொல்லி அந்த குழந்தையை மிரட்டி இரும்பு கம்பியால் சூடு வைப்பது போல் கண்ணம்மாவிடம் நாடகம் ஆடுகிறார்.

இதனால் மீண்டும் தலை தெறித்து வீட்டிற்கே ஓடி வருகிறார் கண்ணம்மா. தன் பிள்ளையை காப்பாற்ற என்ன செய்வதென்றே தெரியவில்லையே என கடவுளிடம் புலம்பி அழுகிறார். இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here