நாடு முழுவதும் பாரத் பந்த் – போக்குவரத்து முடங்கியதால் பொதுமக்கள் அவதி!!

0

மத்திய அரசை கண்டித்து, தொழில் சங்கங்கள் அறிவித்த 2 நாள் போராட்டம்,காரணமாக மொத்த நாடும் ஸ்தம்பித்துப் போயுள்ளது. பொதுப் போக்குவரத்து முடங்கியதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இரண்டு நாள் ஸ்டிரைக்:

மத்திய அரசைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் அறிவித்த இரண்டு நாள் பொது வேலை நிறுத்த போராட்டம், இன்று காலை 6மணி முதல் தொடங்கியது. நாடு முழுவதும் சுமார் 20 கோடி, அமைப்புசாரா தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்கிறார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தில் சி.ஐ.டி.யு, எச்.எம்.எஸ், ஐ.என்.டி.யு.சி,எல்.பி.எப், ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் பங்கேற்கிறது. தமிழகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இந்த இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளன.

ஆனால், தமிழக அரசு ஊழியர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றால், ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதுடன் ஊதியப் பிடித்தம் செய்யப்படும் என தலைமைச் செயலாளர் எச்சரிக்கை விடுத்திருந்தார். தமிழகத்தில் இன்று காலை முதலே பெரும்பாலான பேருந்துகள் இயங்காததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். தலைநகர் சென்னையில் குறைந்த அளவிலான பேருந்துகள் இயக்க பட்டதால், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை முடங்கியது. 2 நாள் விடுமுறைக்கு பின், இந்த பொது வேலைநிறுத்தம் காரணமாக பல மக்கள் ஸ்தம்பித்துப் போயுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here