கண்ணம்மாவை தோற்கடிக்க திட்டம் போடும் பாரதி, வெண்பா – நிறைவேறுமா?? சூடுபிடிக்கும் கதைக்களம்!!

0

பாரதி கண்ணம்மாவும் ராஜா ராணி சீரியலும் தற்போது மெகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது சந்தியாவை போட்டியிலிருந்து தோற்கடிக்க ஆதியும் பார்வதியும் சேர்ந்து புதிய திட்டம் போடுகிறார்கள். பிறகு பாரதியிடம் இன்னும் நெருக்கமாகும் லட்சுமியை பார்த்ததும் கடுப்பாகிறார் கண்ணம்மா.

மெகா சங்கமம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மெகா சங்கமத்தில் வெண்பாவும், பார்வதியும் கூட்டு சேர்ந்து சந்தியாவையும் கண்ணம்மாவையும் தோற்கடிக்க முயற்சிக்கின்றனர். இதனால் கொஸ்டின் பேப்பரை பார்வதியே திருடி அதனை சந்தியாவின் பேக்கில் வைத்து மாட்டி விடுகிறார். இதனை லட்சுமி வீடியோ எடுத்து பாரதியிடம் கொடுக்கிறார்.

பாரதி கொடுத்த வீடியோவால் சரவணன் மற்றும் சந்தியா நிகழ்ச்சியிலிருந்து காப்பாற்றப்படுகிறார்கள். சரவணனும் சந்தியாவும் அடுத்து நடக்கப்போகும் சமையல் போட்டியில் என்ன பண்ண போகிறோம் என பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சமையல் போட்டியில் நீங்க சமைச்சுடுங்க என சந்தியா கூற, குலுக்கல் செஞ்சு யாராவது ஒருத்தவங்கள தான் சமைக்க சொல்லுவாங்க என சரவணன் கூறுகிறார். பிறகு சந்தியாவுக்கு சமையலில் சில டிப்ஸ் சொல்லி கொடுக்கிறார் சரவணன். சந்தியா போட்டியில் கலந்து கொள்வதால் தான் தோத்துவிட்டோம் என்ற கடுப்பில் பார்வதி இருக்கிறார்.

பார்வதியின் பிளான் எல்லாத்தையும் சரியாக கண்டுபிடித்து சொல்லுகிறார் ஆதி.  காலை விடிந்ததும் அஞ்சலிக்கு பாலுடன் குங்குமப்பூ கலந்து கொடுக்கிறார் அகில். அடுத்ததாக இருவரும் பேசிக்கொண்டிருக்கையில், கண்ணம்மா அண்ணி இந்த போட்டியில் ஜெயிக்கணும்ன்னு நீ நெனைக்குறியா என அகில் கேட்க கண்டிப்பாக கண்ணம்மா ஜெயிச்சா நான் சந்தோசப்படுவேன் என அஞ்சலி கூறுகிறார்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

பிறகு லட்சுமியும் ஹேமாவும் சந்திக்கிறார்கள். ஹேமா தரும் சாக்லெட்டை வாங்கி சாப்பிடுகிறார் லட்சுமி. அப்போது ஹேமா வீட்டு காரை பார்த்து ஆசைப்பட்ட லட்சுமியை காரில் வைத்து ஒரு ரவுண்ட் கூட்டிப்போகிறார் ஹேமா. பிறகு பாரதி போனில் பேசிக்கொண்டிருப்பதை கேட்கும் வெண்பா நீ இங்க நிம்மதியா இருக்கியா.

இல்லையே. நீ கஷ்டப்படுறத என்னால பாக்க முடியல பாரதி என வெண்பா கூறுகிறார். கண்ணம்மா போட்டியில் ஜெயிக்க கூடாது என பாரதி நினைப்பதாக சொல்ல, நாளைக்கு கண்ணம்மா போட்டியில் ஜெயிக்க மாட்டா என வெண்பா கூறுகிறார். பிறகு ஹேமாவுடன் பேசிக்கொண்டிருக்கிறார் கண்ணம்மா. எனக்கு டான்ஸ் கத்துகுடுங்க என ஹேமா கேட்க எனக்கு டான்ஸ் ஆட தெரியாதே என கண்ணம்மா கூறுகிறார்.

பிறகு சௌந்தர்யா, பாரதி, ஹேமா மூவரையும் பார்த்ததாக கண்ணம்மாவிடம் சொல்லுகிறார் லட்சுமி. இதைக்கேட்டதும் கோவப்படுகிறார் கண்ணம்மா. அப்போது வீட்டிற்கு போனதும் என்னால ஸ்விம்மிங் கிளாசுக்கு போக முடியாது என லட்சுமி கூற எல்லார் கிட்டயும் பணம் இருக்கு உன்கிட்ட மட்டும் பணம் இல்ல ஏன்மா, வெளிநாட்ல இருக்க அப்பா கூட உனக்கு பணம் தர மாட்டாரா என லட்சுமி கேட்கிறார்.

லட்சுமி அங்கிருந்து சென்றதும் நீ சௌந்தர்யா கூட இருக்கலாம்ல என துளசி கேட்க, முடியாது அது சரியா வராது என மறுக்கிறார் கண்ணம்மா. பிறகு பாரதியை சந்திக்கிறார் லட்சுமி. அப்போது சாமி கும்பிட்டு வந்த லட்சுமி பாரதிக்கு திருநீறு வைத்து விடுகிறார். பிறகு லட்சுமி பாரதி இருவரும் சேர்ந்து எக்ஸ்சர்சைஸ் செய்வதை பார்த்து விடுகிறார் கண்ணம்மா.

பிறகு கண்ணம்மாவிடம் திரும்பி வரும் லட்சுமியிடம் நீ எங்க போயிட்டு வர்ற என கேட்க நான் டாக்டர் அங்கிளை பாத்துட்டு வர்றேன் என கூறிய லட்சுமி, பாரதியை பார்க்கவா என வற்புறுத்தி கண்ணம்மாவை அழைத்து செல்லுகிறார். அங்கு பாரதியை காணவில்லை என்றதும் கண்ணம்மாவை திட்டி விட்டு பிறகு கண்ணம்மாவுக்கு திருநீறு வைத்து விடுகிறார் லட்சுமி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here