நான் என் அம்மாவுக்கு கல்யாணம் பண்ணி வைப்பேன்.., அத கேக்க நீங்க யாரு.., கோபி மூக்கை உடைத்த எழில்!!

0
நான் என் அம்மாவுக்கு கல்யாணம் பண்ணி வைப்பேன்.., அத கேக்க நீங்க யாரு.., கோபி மூக்கை உடைத்த எழில்!!
நான் என் அம்மாவுக்கு கல்யாணம் பண்ணி வைப்பேன்.., அத கேக்க நீங்க யாரு.., கோபி மூக்கை உடைத்த எழில்!!

சுவாரசியமான திருப்பங்களுடன் ரசிகர்களின் ஆதரவோடும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். வீட்டிற்கு வந்த இனியாவிடம் யாரை கேட்டு பிறந்தநாள் விழாவுக்கு சென்ற என ராதிகா சத்தம் போடுகிறார். அதை பார்த்த கோபி ராதிகாவை அமைதியாக இருக்க சொல்ல, ஆமா நான் மட்டும் அமைதியா இருக்கணும், ஆனா இனியாவை மட்டும் நீங்க எதுவும் சொல்ல மாட்டிங்களா என கத்துகிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த குழப்பத்தில் கோபி மாடிக்கு போக, அங்கே வந்த ராதிகா உங்க குடும்பத்தார் அனைவரும் என்னை மதிக்கணும். நீங்க தான் அதுக்கு ஏதாச்சும் பண்ணனும் என சொல்கிறார். இதை கேட்ட கோபி யோசித்துக் கொண்டே, குடிபோதையில் மாடியிலேயே தூங்கிவிடுகிறார். பின் காலையில் வாக்கிங் சென்ற கோபி எழிலை பார்த்து, நேத்து வந்தவன் யார், அவன் ஏன் உங்க அம்மா கிட்ட அவ்ளோ நேரம் பேசிட்டு இருக்கா.

ஆபாச வீடியோ காலுக்கு லட்சத்தில் பேரம் பேசிய மர்ம ஆசாமி.., சீரியல் நடிகை கொடுத்த திடுக்கிடும் தகவல்!!

இது போதாதுன்னு அவன் கூட பைக்ல வேற போறா, பார்க்கவே ரொம்ப அசிங்கமா இருக்கு. இதையெல்லாம் நீ கேக்க மாட்டியா என கேட்கிறார். அதுக்கு எழில் அவர் ஏன் அம்மாவோட பிரண்ட். நீங்க பண்ண துரோகத்தை விட எங்கம்மா ஒன்னும் தப்பு செய்யல. ஒரு வேல எங்க அம்மாக்கு யாரையாச்சும் புடிச்சா, நானே அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வைப்பேன். இப்படி எங்க அம்மாவ பாலோவ் பண்ணி என்கிட்ட வந்து நீங்க சொல்றது தான் அசிங்கம் என கோபியின் கேள்விக்கு எழில் பதிலடி கொடுக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here