பாக்கியலட்சுமி சீரியலில் எழில் திருமணத்தில் கடைசி நேரத்தில் திருப்பம் நடந்ததை அடுத்து, புது பிரபலம் ஒருவர் என்ட்ரியாக உள்ளதாக அப்டேட் கிடைத்துள்ளது.
வெளியான அப்டேட்:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி தொடர்களில் ஒன்று பாக்கியலட்சுமி. தற்போது எழில் திருமணம் சார்ந்த காட்சிகள் சீரியலில் காட்டப்பட்டு வருகிறது. எழில் தர்ஷினியை திருமணம் செய்தால் வரதட்சணையாக கிடைக்கும், பணத்தைக் கொண்டு வீட்டை மீட்டு விடலாம் என ஈஸ்வரி உள்ளிட்டோர் நினைக்கின்றனர். இதனால் எழிலும் வர்ஷினியை திருமணம் செய்ய தயாராகிறார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
ஆனால் கடைசி நேரத்தில் ஒரு ட்விஸ்ட் நடந்து அமிர்தா எழில் திருமணம் நடக்கிறது. இதனால், பணம் கிடைப்பதில் சிக்கல் எழுகிறது. இந்த சிக்கலை தீர்த்து வைக்க, சீரியல் நடிகர் ஜீவா இத்தொடரில் என்ட்ரி கொடுக்க உள்ளாராம். இவர் தற்போது திருமகள் சீரியலில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தரமான சம்பவங்களுடன் வெளியான தளபதி 67 அப்டேட்.., படக்குழுவினர் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு!!
இவர் பாக்யாவுக்கு பணம் தந்து உதவ சீரியலில், என்ட்ரி கொடுக்க உள்ளதாக கூறி இது சார்ந்த போட்டோக்கள் வெளியாகியுள்ளது. பாக்யாவுக்கு பணம் கிடைக்காமல் தடுக்க ராதிகாவும் இந்த இடத்திற்கு வந்துள்ளார். இதை வைத்துப் பார்க்கும்போது சீரியலின் அடுத்த ட்ராக் இதை வைத்து தான் நகரும் என சொல்லப்படுகிறது.