விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று, குழந்தை உண்டாகி இருப்பதால் ஜெனியின் மீது பாட்டி மிகுந்த அன்பு செலுத்துகிறார். அதனால் மகிழ்ச்சியில் திளைத்து இருக்கும் ஜெனி, செழியனிடம் குழந்தை வேண்டாம் என்று சொல்ல வேண்டாம் என கெஞ்சுகிறார்.
பாக்கியலட்சுமி சீரியல்
பாக்கியலட்சுமி சீரியலில் குழந்தை பெற்று கொள்வது பற்றி ஜெனியிடம் வாதாடி கொண்டிருக்கிறார் செழியன். இந்நிலையில் இன்றைய கதையில், பாக்கியா உணவு சமைத்து கொடுக்கும் இடத்தில் இருக்கும் மேடம் தன்னுடைய உணவு பற்றி கூறியதை குறித்து சந்தோஷமாக பேசிக்கொண்டே நடந்து வருகிறார். இதையடுத்து பாட்டியும் தாத்தாவும் பேப்பரில் என போட்டு உள்ளது என்பதை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அப்பொழுது ஜெனி வாந்தி எடுக்கும் சத்தம் கேட்டு பாட்டி அவரை பார்க்க செல்கிறார். அதன் பின்னர் அவரை அழைத்து உட்கார வைக்கிறார். அதன் பின்னர் பாட்டி என்ன என்ன சாப்பிட வேண்டும். எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை பற்றியும் கூறுகிறார். அதன் பிறகு ஜெனியை படுத்து தூங்க சொல்கிறார். இந்நிலையில் பாட்டி தன் மீது காட்டும் அன்பை எண்ணி சந்தோசத்துடன் ஓய்வு எடுக்க ரூமுக்கு செல்கிறார் ஜெனி.
இதனை அடுத்து ரூமுக்கு வரும் ஜெனியிடம் செழியன் மறுபடியும் வாந்தியா? என கேட்கிறார். அதற்கு ஜெனி ஆம் என சொல்லி, பாட்டி தன் மீது வைத்திருக்கும் அன்பு பற்றியும், பாட்டி என்கிட்ட அவ்வளவு சந்தோஷமாக பேசுனாங்க, இந்த அன்பு எனக்கு வேணும், இந்த அன்பை என்கிட்ட இருந்து பறிக்காத, மறுபடியும் குழந்தை வேணான்னு சொல்லாத செழியா என கூறுகிறார். மேலும் எனக்கு குழந்தை வேணும் என சொல்லிக்கொண்டே கீழ போகிறார்.
அதற்கு செழியன் எதுவும் பேசாமல் கோவத்துடன் ஜெனியை பார்த்தபடி உள்ளார். அதன் பின்னர் பாக்கியா ஜூஸ் செய்து ஜெனிக்கு கொடுக்கிறார். இந்நிலையில் ஜெனிக்கு பிறக்க உள்ள குழந்தை பற்றி கேலியும் கிண்டலுமாக செல்வி, ஜெனி, பாக்கியா மற்றும் பாட்டி பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அதன் பிறகு பாட்டி செழியன், குழந்தை பிறக்க போவதை பற்றி என்ன சொல்கிறார் என கேட்கிறார். அதற்கு ஜெனி செழியனுக்கு இப்போ குழந்தை பெத்துகிறதுல விருப்பம் இல்லை மத்தபடி வேற ஒன்னும் இல்லை என கூறுகிறார்.
அதற்கு பாட்டி செழியன் மற்றும் கோபி பிறந்த கதையை பற்றி கூறிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது எழில் வருகிறார். அதன் பின்னர் ஒரு சில பொருட்கள் வாங்க வேண்டும் என்று சொல்லி எழிலை கூப்பிட்டு கொண்டு கடைக்கு செல்கிறார் பாக்கியா.
அப்பொழுது வழியில் அமிர்தாவின் அப்பாவை பார்கின்றனர். அதன் பின்னர் அமிர்தாவின் வீட்டிற்கு பாக்கியாவை அழைத்து செல்கிறார் எழில். அங்கு அமிர்தா மற்றும் அவரின் அம்மாவை சந்தித்து பேசுகிறார் பாக்கியா. இத்துடன் இன்றைய கதை முடிகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்