நாடு முழுவதும் மூத்த குடிமக்கள் உள்ளிட்ட அனைவரும் பாதுகாப்பான பயணத்திற்கு ரயில் சேவையை அதிகம் விரும்புகின்றனர். ஆனாலும் முன்பதிவின் போது மூத்த குடிமக்கள் மற்றும் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படாமல் மேலே உள்ள படுக்கை வசதி தானாகவே அலர்ட் செய்யப்படுவதால் மிகவும் சிரமப்படுகின்றனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதற்கான தீர்வு குறித்து மக்களவையில் ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் விளக்கமளித்துள்ளார். அதாவது “நாடு முழுவதும் 2.687 பேஸஞ்சர், 2,032 எக்ஸ்பிரஸ் உட்பட 10,378 ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் ஸ்லீப்பர் மற்றும் A/c கோச் முன்பதிவின் போது 45 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் பெண்கள் தானாகவே கீழே உள்ள படுக்கை வசதிக்கான டிக்கெட் விநியோகிப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இவர்கள் விருப்பம் தெரிவிக்கவிட்டாலும் தானாகவே இந்த வசதி அலர்ட் ஆகும்.” என எழுத்துபூர்வமாக அறிவிப்பை தெரிவித்துள்ளார்.