ஆகஸ்ட் 30 வரை இரவு ஊரடங்கு அமல் – வைரஸ் பரவல் அதிகரிப்பதால் பெங்களூரில் கட்டுப்பாடுகள் தீவிரம்!!

0

பெங்களூரில் கொரோனவால் தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இரவு ஊரடங்கு ஆகஸ்ட் 30 வரை அங்கு நீடிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பல மாநிலங்களில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே தொற்றை குறைக்க சில கட்டுப்பாடுகளை அந்ததந்த மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. இந்நிலையில் பெங்களூருவிலும் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நேற்று மட்டும் கர்நாடகாவில் 1,365 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 327 பேர் பெங்களூருவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பெங்களூரில் தற்போது வரை 7,920 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  

பெங்களூரு போலீஸ் கமிஷனர் கமல் பாண்ட் கூறியதாவது, படிப்படியாக கர்நாடகா தலைநகர் பெங்களூரில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை இரவு ஊரடங்கு அமல்ப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் மூன்று நபர்களுக்கு மேல் பொது இடங்களில் சேர்ந்து செல்ல கூடாது போன்ற கட்டுப்பாடுகளும் பெங்களூரில் விதிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here