கர்நாடகாவில் உள்ள ஒரு ஜெயில் ரூ.500 செலுத்துவதன் மூலம் ஒரு நாள் கைதியாக சிறையில் வாழலாம் என்ற வினோத அறிவிப்பை விடுத்துள்ளது.
பொதுவாகவே மக்கள் பலருக்கு சிறை கைதிகள் எவ்வாறு வாழ்வார்கள், என்ன என்ன வேலை செய்வார்கள், அவர்களின் வாழ்கை முறை என்னவாக இருக்கும் என்ற ஆர்வம் இருக்கும். தற்போது அவர்களுக்காவே ஹிண்டல்கா சிறை நிர்வாகம் ஒரு அறிவிப்பை அறிவிக்கவுள்ளது.
அதாவது கர்நாடக மாநிலம் பெலகாவியில் இருக்கும் ஹிண்டல்கா சிறை நிர்வாகம் ரூ.500 செலுத்துவதன் மூலம் ஒருநாள் முழுவதும் கைதியாக தங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. எந்த சலுகையுமின்றி கைதி எண், சீருடை, உணவு, வேலைகள் என கைதிகள் போலவே அவர்கள் நடத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிறை கைதிகள் போலவே இவர்களும் காலை 5 மணிக்கு எழுந்திருக்கவேண்டும். இவர்களுக்கு 6 மணிக்கு காலை உணவும், 11 மணிக்கு மதிய உணவும் வழங்கப்படும். இவர்களும் மற்ற கைதிகளை போலவே அனைத்து வேலைகளையும் செய்யவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்