கர்நாடக மாநிலம் பெங்களூரை அடுத்து உள்ள பெலகாவியில் கொரோணவால் உயிரிழந்த அதிர்ச்சியில் அங்கிருந்த ஆம்புலன்சிற்கு உறவினர்கள் தீ வைத்ததால் பதற்றம் ஏற்பட்டது. ICU வார்டில் இருந்த மருத்துவரையும் தாக்கியதாக தகவல்.
கற்களும் வீசப்பட்டது:
கொரோனா தொற்று ஏற்பட்டு நேற்று மரணம் அடைந்த துக்கத்தை தாளாமல், மருத்துவமனைக்கு சொதந்தமான ஆம்புலன்சில் தீ வைத்தனர். மேலும் BIMS மருத்துவ வளாகம் மீது கற்கள் வீசியும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
ஊழலைத் தடுக்க மக்கள் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் – துணை ஜனாதிபதி..!!
இறந்த நோயாளியை பரிசோதனை செய்து பார்த்து கொண்ட மருத்துவரை தாக்கியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மூத்த அதிகாரி ஆன காவல்துறை ஆணையர் திரு. தியாகராஜன் அங்கு வந்து ஆய்வு நடத்தினார்.
புதிய உச்சம்:
பெங்களூரில், ஜூலை 18 இல் அடைந்த உச்சமான 4537 நோயாளிகளை நேற்று முறியடித்து புதிய உச்சத்தை அடைந்தது உள்ளது. இதில் 4764 நோயாளிகள், 55 இறப்புகள் மற்றும் 1780 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்த 4764 நோயாளிகளில் 2050 பேர் பெங்களூரு நகர பகுதியை சேர்ந்தவர்கள். ஆக, மொத்தம் தற்போது பெங்களூரில் 75,833 நோயாளிகளும், 1519 இறந்ததும் 27,239 பேரும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.