மார்ச் 31க்குள் பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைத்து விடுங்கள் – இல்லைனா செல்லாது..!

0

வருமான வரித்துறையின் பான் கார்டுகளை வரும் மார்ச் 31க்குள் ஆதார் எண்ணுடன் இணைக்கவில்லை என்றால் பான் கார்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆதாருடன் இணைக்கப்படாத பான்கார்டுகளுக்குரியவர்கள் மீது பான் எண்ணை குறிப்பிடாதது, பயன்படுத்தாது போன்றவற்றுக்கான நடவடிக்கை வருமானவரித்துறையினரால் மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டு உள்ளது.

காலக்கெடு முடிவடைகிறது..!

மார்ச் 31க்கு பிறகு ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைத்தால் மீண்டும் அதனை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே வருமானவரித்துறை எளிதான ஆன்லைன் முறையில் இ-பான் கார்டு பெரும் முறையையும்மார்ச் 31க்குள் பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைத்து விடுங்கள் – இல்லைனா செல்லாது..!

மத்திய பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. இந்த எலெக்ட்ரானிக் பான் கார்டு (இ-பான்) எந்தவித கட்டணமும் இல்லாமல் விண்ணப்பதாரருக்கு வழங்கப்படும். இதன் மூலம் ஏற்கனவே 31 கோடி பான் கார்டுகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு விட்டன. இன்னும் 18 கோடி பான் கார்டுகள் விரைவில் இணைக்கப்பட உள்ளன.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here