பெண்களுக்கு தங்கள் முக அழகினை பற்றி தான் அதிகமாக கவலை கொள்ளுவர். அந்த வகையில் இதற்கு என்று பெண்கள் பார்லர் சென்று பல ரூபாய் செலவழிக்கின்றனர். ஆனால், வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களை கொண்டு அழகாக மாறி விடலாம் என்று யாருக்கும் தெரிவதில்லை.
வீட்டிலேயே முக அழகு
பெண்கள் என்றால் அவர்களுக்கு தங்கள் முக அழகின் மீது அவ்வளவு ஆர்வம் இருக்கும். அதிலும் குறிப்பாக மிருதுவான சருமம் வேண்டும் என்று தான் ஆசைப்படுவர். இதற்காக பார்லர் சென்று அழகினை மெருகேற்றி விடுகின்றனர். ஆனால், அவை எதுவுமே தேவை இல்லை. அவற்றை பின்பற்றினாலும், கூடிய விரைவிலேயே முக அழகு பாதிக்கப்பட்டு விடும்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலத்திற்கு நடந்த விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்!!
இதனால் தான் வீட்டில் இயற்கை பொருட்களை கொண்டு அழகினை பராமரிக்க வேண்டும் என்று பெரியோர்கள் கூறுகின்றனர். இன்று வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு எப்படி ஒரு நல்ல பேஸ் பேக் தயாரிக்கலாம் என்று பார்ப்போம். முதலில், ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, எலுமிச்சை சாறு ஒரு டீஸ்பூன் அளவிற்கு, தயிர் ஒரு 1 டீஸ்பூன் அளவிற்கு எடுத்து கொண்டு நன்றாக கிளற வேண்டும். பின், அதனை எடுத்து முகத்தில் தடவ வேண்டும்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்த கலவையினை ஒரு 15 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். இவற்றை தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள அழுக்கள் நீங்கி, முகம் பொலிவடைந்து விடும். அதே போல் இதனை தொடர்ந்து பின்பற்றுவதன் மூலமாக எந்த ஒரு பின்விளைவுகளும் ஏற்படாது.