14வது ஐபிஎல் தொடர் குறித்த முக்கிய முடிவு – மிஞ்சிய தொடர்கள் நடைபெறுமா?? பிசிசிஐ அறிக்கை வெளியீடு!!

0

கொரோனா தாக்கத்தின் காரணமாக ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டது. இதனால் வருத்தமடைந்த இளைஞர்களுக்கு எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்ற செய்தி மகிழ்ச்சி அளித்துள்ளது.

நடைபெறுமா ஐபிஎல் போட்டிகள்??

ஐபிஎல் போட்டிகள் வந்தாலே “சின்னராச கைல பிடிக்கமுடியாது” அப்டினு சொல்லுற மாதிரி இளைஞர்கள் ஒரே குஷி ஆகிருவங்க. ஐபிஎல் போட்டிகளை இளைஞர்கள் திருவிழா மாதிரி கொண்டாடி வந்தார்கள். இந்நிலையில் கொரோனா தொற்று தாக்கத்தினால் நாடு முழுவதும் கடுமையான பாதிப்புக்குள்ளாகியது. அப்போது பயிற்சியின் போது விளையாட்டு வீரர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டார்கள் என செய்திகள் வெளிவந்தன. இதனை தொடர்ந்து நடந்து கொண்டிருந்த ஐபிஎல் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் இளைஞர்கள் கடுமையான மனவருத்தம் அடைந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது கொரோனாவால் நிறுத்தப்பட்ட எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை எப்போது நடத்துவது என பிசிசிஐ இன்று ஆலோசனை நடத்திவந்தது.. இதுவரை 29 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் இன்னும் 31 ஆட்டங்கள் மீதமுள்ளன, அவைகள் எப்போது நடத்தப்படும் என்பது குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி தலைமையில் இன்று நடந்தது. தற்போது எஞ்சிய போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தலாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது வெளிவந்த அறிக்கையின்படி துபாய், சார்ஜா, அபுதாபியில் செப் 18 முதல் அக்டோபர் 10ம் தேதிக்குள் நடத்தி முடிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் இளைஞர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்துக்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here