இந்திய கிரிக்கெட் அணிக்கு பல்வேறு அம்சங்கள் கொண்ட புதிய ஜெர்சியை வெளியிட உள்ளதாக BCCI கிரிக்கெட் வாரியம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
முதல் ஆட்டமே அதிரடி!!
T20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியானது ஆஸ்திரேலியாவில் வரும் 16ம் தேதி தொடங்க உள்ளது. இந்திய அணி தனது முதல் போட்டியை வரும் அக்டோபர் 23ம் தேதி ஆட உள்ளது. அந்த ஆட்டத்தில், பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. எப்போதுமே இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி என்றால் அந்த போட்டி குறித்த எதிர்பார்ப்பு இருநாட்டு ரசிகர்களிடையே அதிகமாக இருக்கும். மேலும் தற்போது முடிவடைந்த ஆசிய கோப்பையில் தொடரில் பாகிஸ்தான் அணியிடம் இந்தியா தோல்வி அடைந்தது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதனால் T20 உலக கோப்பை தொடரில் இந்திய வீரர்கள் பதிலடி கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் உலக கோப்பையில் பங்கேற்க உள்ள இந்திய அணி வீரர்களின் பட்டியலை நேற்று பிசிசிஐ அறிவித்தது. மேலும் போட்டி தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் BCCI இந்திய அணிக்கு புதிய ஜெர்ச்சியை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஜெர்ச்சியில் நாட்டின் சின்னங்களை குறிக்க கூடிய பல அம்சங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஜெர்ச்சியை BCCI உலக கோப்பை தொடருக்கு முன்னதாக அறிவிக்க உள்ளனர். இதனால் T20 உலக கோப்பை தொடரில் இந்திய வீரர்கள் அனைவரும் புதிய ஆடையுடன் தான் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் அனைவருக்கும் உலக கோப்பை தொடர் மீதான ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் போகிறது.