பொதுவாக காவல் துறையினரின் ரோந்து பணிகளுக்காக கார், ஜீப், பைக் போன்ற வாகன வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அந்த வகையில் தற்போது போக்குவரத்து காவல் துறையினருக்கு ரோந்து பணிக்காக சிவப்பு நிற பிரத்தேக ஆட்டோ வழங்கபட்டுள்ளது.
இந்த வசதி இந்திய அளவில் தமிழகத்தில் கோவை மாநகர காவல் துறையினருக்கு மட்டும் 2 பேட்டரிகளுடன் கூடிய இந்த ஆட்டோ வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒலிபெருக்கி மற்றும் சிவப்பு & நீல விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஆட்டோக்களின் 4 புரங்களும் காவல்துறையினரின் அவசர தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆட்டோக்களில் ஆட்கள் அமர்ந்து செல்வதற்கும், பொருட்கள் ஏற்றிச் செல்வதற்கும் ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோந்து ஆட்டோக்கள் நேற்றில் இருந்து கோவை மாநகரத்திற்கு அமலுக்கு வந்துள்ளது.