தமிழ்நாடு முழுவதும் அனைத்து பகுதிகளிலும் பொங்கல் பண்டிகை ஜனவரி 15ம் தேதி முதல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மேலும் இன்று (ஜனவரி 17) காணும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதால் பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலா இடங்களுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக காலை முதலே சென்று வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இவ்வாறு மக்கள் கூடுவதால் குழந்தை தவறுதல், திருட்டு போன்ற அசம்பாவித செயல்கள் நடக்க வாய்ப்புள்ளது. இதனால் பெருநகரங்களில் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை ட்ரோன் மூலமும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
பொங்கல் பண்டிகையின் போது சூடுபிடித்த மது விற்பனை.., ஒரே நாளில் அரசுக்கு இத்தன கோடி வருமானம்!!!
இதையடுத்து காணும் பொங்கலான இன்று (17.01.2023) மட்டும் சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டுக்கடங்காத கூட்டம் வரவிருப்பதால் மக்கள் கடலில் இறங்காதவாறு தடுப்புகளை அமைத்து ஆயிரக்கணக்கான போலீசார் கண்காணித்து வருகின்றனர்.