தமிழ்நாட்டை சேர்ந்த மூன்று வீராங்கனைகள் இந்திய கூடைப்பந்து போட்டியின் சீனியர் அணிக்கு தேர்வாகி இருப்பது வரலாற்றில் முதல் முறையாக நிகழந்துள்ளது.
வரலாற்று சம்பவம்:
தமிழக கூடைப்பந்து வரலாற்றிலேயே முதல் முறையாக முக்கிய சாதனை ஒன்று நிகழ்ந்துள்ளது. அதாவது தமிழகத்தை சேர்ந்த சத்யா, புஷ்பா மற்றும் நிஷாந்தி என்ற மூன்று வீராங்கனைகள் இந்திய சீனியர் கூடைப்பந்து போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். இவர்கள், மூவரும் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர்கள் என்பதால் இது மிக பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.
இவர்களில் சத்யா மற்றும் புஷ்பா ஆகியோர் நாகப்பட்டினத்தை சேர்ந்த சகோதரிகள் என்பது குறிப்பிடத் தகுந்தது. மேலும், இதில் நிஷாந்தி என்பவர் சென்னையை சேர்ந்தவர் என்பது கவனிக்க தகுந்தது. இவர்கள் மூவரும், ஜோர்டானில் நடைபெறும் ஆசிய கோப்பை சாம்பியன் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. தற்போது இவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்