பாரதி கண்ணம்மா சீரியலில் இப்பொழுது அனைவரும் ஷாக்காகும் விதத்தில் பெரிய ட்விஸ்ட்டை கொண்டு வந்து விட்டனர். பாரதி இப்பொழுது தான் திருந்தி கண்ணம்மாவை தனது மனைவியாக ஏற்றுக்கொண்ட நிலையில் அதிலும் பெரிய இடி விழுந்து விட்டது.
பாண்டி செய்த காரியத்தால் இப்பொழுது மருத்துவமனையில் பழசை மறந்து தவித்து வருகிறார். இனிமேல் கண்ணம்மா என்ன செய்ய போகிறார்?? இனியாவது பாரதியை கண்ணம்மா ஏற்றுக்கொள்வாரா?? அப்படி ஏற்றுக்கொண்டாலும் பாரதிக்கு கண்ணம்மாவை நியாபகம் இருக்காதே. இதை வைத்து தான் கதையை ஓட்ட போகின்றனர்.
அதாவது பழசை மறந்த கண்ணம்மாவிடம் பழக ஆரம்பித்து அவரிடம் இருக்கும் நல்ல குணங்கள் பிடித்துப்போக தன் மனைவி என்ற விஷயமே தெரியாமல் காதலிக்க போகிறார். கண்ணம்மாவும் பழைய பாரதியின் குணங்கள் அனைத்தும் இருப்பதை பார்த்து அவருக்கு சில நினைவுகள் வந்து பாரதியை ஏற்றுக்கொள்ளவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இனிமேல் கதை இதை வைத்து தான் நகரப்போகிறது என்று மட்டும் தெரிகிறது.