பாரதி பின்னாடியே சுற்றி தொழிலை கோட்டை விட்ட வெண்பா – சூடுபிடிக்கும் ‘பாரதி கண்ணம்மா’ கதைக்களம்!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் எதிர்பாராத பல திருப்பங்கள் ஒளிபரப்பாகி வருகிறது. வெண்பாவிற்கு வேறு ஹேமா, கண்ணம்மாவின் குழந்தையாக இருக்குமோ?? என்ற சந்தேகமும் எழுகிறது. இப்படியே போய்க்கொண்டிருக்க எப்பொழுது கண்ணம்மா பற்றிய உண்மை தெரியவரும் என்று ரசிகர்களும் காத்துக் கொண்டுள்ளனர்.

பாரதி கண்ணம்மா

நேற்றைய எபிசோடில் கண்ணம்மாவிற்கு லட்சுமி இன்ப அதிர்ச்சியாக பிறந்தநாள் கேக் கட் செய்து கொண்டாடினார். மேலும் வெண்பா டெஸ்ட் எடுப்பதற்காக ஹேமாவின் தலைமுடியை யாருக்கும் தெரியாமல் எடுக்கிறார். பாரதிக்கும் இதுநாள் வரை ஹேமா தன்னுடைய குழந்தை தான் என்று தெரியாது. இன்றைய எபிசோடில் கண்ணம்மா வீட்டின் வாசலில் உட்கார்ந்திருக்க, லட்சுமியின் ஸ்கூல் டீச்சர் அங்கு வர லட்சுமி படிப்பை பற்றி விசாரிக்கிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அப்பொழுது அவர் ஸ்கூலுக்கு வராததை சொல்ல கண்ணம்மா அதிர்ச்சியடைகிறார். எங்கே போனால்?? என்ன செய்கிறாள்?? என்று தெரியாமல் தவித்துக் கொண்டுள்ளார். அடுத்ததாக அஞ்சலியை காட்ட தன் அம்மாவை பார்க்க செல்கிறார். அப்பொழுது அவரின் அப்பா சண்முகம் வர அஞ்சலி இன்னும் கண்ணம்மாவை தான் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா?? என்று கேட்க, என் மகளை எப்படி மறப்பேன் என்று சோகமடைகிறார்.

அடுத்ததாக அவளால் பாரதியின் வாழ்க்கை தான் கெடுகிறது என்று சொல்ல சண்முகத்திற்கு கோவம் வருகிறது. அங்கிருந்து அஞ்சலியை திட்டிவிட்டு செல்கிறார். அடுத்ததாக லட்சுமி ஸ்கூல் முடிந்து வீட்டிற்கு வர கண்ணம்மா இன்றைக்கு என்ன பாடம் நடத்தினார்கள் என்று கேட்க லட்சுமி ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார். என் கிட்டயே பொய் சொல்றியா?? என்று கண்ணம்மா மிரட்ட ஒரு கல்யாண மண்டபத்தில் வேலைபார்த்து 500 சம்பாதித்து வந்ததை சொல்லுகிறார்.

இதனால் கண்ணம்மா கதறி அழுகிறார். லட்சுமியும் கண்ணம்மாவை சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு அழைக்க கண்ணம்மாவோ வர மறுக்கிறார். மேலும் வெண்பாவை காட்டுகின்றனர். வெண்பா ஹேமாவை பற்றி யோசித்துக் கொண்டுள்ளார். எப்படியும் டெஸ்ட் எடுத்து விட வேண்டும் என்று நோக்கத்துடன் அமர்ந்துள்ளார்.

‘மெண்டல் டார்ச்சர் அனுபவித்தேன்’ – பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் திடீர் ஓய்வு அறிவிப்பு!!

அப்பொழுது அங்கு வேலை பார்க்கும் ஒருவர் வர ஹாஸ்பிடல் அக்கவுன்ட்டில் சுத்தமாக பணம் இல்லாததை சொல்கிறார். வெண்பா ஹாஸ்பிடல் பக்கமே வராததால் நோயாளிகள் வேறு ஹாஸ்பிடலுக்கு செல்கின்றனர் என்றும் கூறுகிறார். இதனாலேயே வெண்பாவிற்கு கோவமும் வருகிறது. அடுத்ததாக நீங்களும் பாரதி பின்னாடி தான் சுத்துறீங்க, உங்களுக்கும் அவருக்கும் கல்யாணமும் ஆகல, உங்க கேரியர் தான் இப்போ கெட்டு போச்சு என்று கூற வெண்பா அவரை கன்னத்தில் அறைகிறார்.

மேலும் ஒரு நர்ஸ் வந்து எதிரில் திறந்திருக்கும் ஹாஸ்பிடல் பற்றி சொல்ல வெண்பாவிற்கு ஷாக் ஆகிறது. நம்மளை எதிர்த்து யார் ஹாஸ்பிடல் திறப்பது என்றும் யோசித்துக் கொண்டுள்ளார். ஆக மொத்தம் வெண்பாவிற்கு அடுத்தடுத்து பல பிரச்சனைகள் வரப்போவது இதிலிருந்தே தெரிகிறது. நாமும் வரும் எபிசோடுகளில் பொறுத்திருந்து பாப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here