பாரதிக்கு வேறு ஒரு பொண்ணோட கல்யாணம் ஆகிருச்சாமே?? சாந்தியின் கேள்விக்கு சௌந்தர்யாவின் பதிலடி!!

0

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில் ஒரு பெண் சௌந்தர்யாவிடம் வந்து உங்கள் மகன் பாரதி வேறு ஒரு பெண்ணை மணந்து கொண்டதாக தான் கேள்வி பட்டதாக சொல்கிறார். இதனை கேட்டதும் சௌந்தர்யா நன்றாக அவரை திட்டி விடுகிறார்.

“பாரதி கண்ணம்மா”

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “பாரதி கண்ணம்மா” சீரியலில் இன்று சௌந்தர்யா மற்றும் வேணு இருவரும் மனசை ரிலாக்ஸ் செய்ய விளையாட்டு மைதானத்திற்கு செல்கின்றனர். வேணு விளையாடுவதை சௌந்தர்யா உற்சாகமாக பார்க்கிறார். இதனை அடுத்து சௌந்தர்யாவிற்கு தெரிந்த ஒரு பெண் வருகிறார். அவரிடம் சௌந்தர்யா குடும்பத்தை பற்றி விசாரிக்கிறார். அவரும் தனது குடும்பத்தின் நலனை பற்றி சொல்லிவிட்டு பாரதி பற்றி கேட்கிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த பெண் சௌந்தர்யாவிடம் குதர்க்கமாக பாரதியை பற்றி கேட்கிறார். பாரதியை வேறு ஒரு பெண்ணிற்கு சாமர்த்தியமாக யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து விட்டீர்கள் என்று கேட்கிறார். இது சௌந்தர்யாவை கோபப்படுத்தி பார்க்கிறது. அதே போல் அந்த பெண், பாரதிக்கு திருமணம் செய்து வைத்திருந்த பெண்ணும் டாக்டர் தான் போலயே என்றும் கேட்கிறார். அவர் வெண்பா குறித்து தான் கேட்கிறார் என்று சௌந்தர்யாவிற்கு நன்றாக தெரிகிறது. இதனால் கோபமடையும் சௌந்தர்யா ஒரு ஆணும், பெண்ணும் நல்ல தோழர்களாக இருக்க கூடாதா? அவர்கள் ஒரே இடத்தில வேலை செய்கிறார்கள்.

சௌந்தர்யாவின் கோபம்:

அதனால் அவர்கள் இருவரும் நல்ல தோழர்கள் என்று கூறுகிறார். உங்கள் கணவர் ஒரு பெண்ணிடம் நன்றாக பேசிவிட்டு அவரகள் இருவரும் நன்றாக தோழர்கள் போல் இருக்கும் பட்சத்தில் உங்கள் கணவர் அந்த பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து விட்டார் என்று கூறினால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா என்று கோபத்துடன் கேட்கிறார். அந்த பெண் நான் கேள்விப்பட்டதை தான் என்று சொல்கிறார். இதனை அடுத்து வேணு மற்றும் சௌந்தர்யா வீட்டிற்கு கெளம்பி சென்று விடுகின்றனர்.

நண்பர் ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள்’ – கமல்ஹாசன் ட்வீட்!!

இதனை தூரத்தில் இருந்து பார்க்கும் வெண்பாவிற்கு அதிகமான கோபம் மற்றும் ஏமாற்றம் வருகிறது. அவரை திட்டவும் செய்கிறார். வெண்பாவிற்கு சௌந்தர்யா சொன்னதும் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது. அதே போல் எத்தனை நாட்களுக்கு தான் சௌந்தர்யா பாரதிக்கு திருமணம் செய்து வைக்காமல் இருக்க போகிறார் என்று பார்ப்போம் என்று கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here