ஹேமாவை இவ்வளவு காப்பாற்றியும் கண்ணம்மா மீது பழிப்போடும் பாரதி – உச்சகட்ட கோவத்தில் சௌந்தர்யா!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது ஹேமாவை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் பாரதி விடா பிடியாக கண்ணம்மா தான் ஹேமாவை கடத்தியது என்று பழி போடுகிறார்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மாவில் தற்போது பல விறுவிறுப்பான சம்பவங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. ஹேமாவை ஒருவழியாக கண்டு பிடித்து மருத்துவமனையில் சேர்கிறார் கண்ணம்மா. சௌந்தர்யாவிற்கும் கால் செய்து நடந்த உண்மைகளை சொல்லி அழைக்கிறார்.

barathi kannamma
barathi kannamma

தன் பேத்திக்கு என்ன ஆனதோ என்று பதற்றத்தில் ஓடி வருகிறார் சௌந்தர்யா. ஹேமா ஐசியுவில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியாகிறார். பாரதிக்கு கால் செய்து நடந்த விஷயத்தை சொல்கிறார். பாரதியும், வெண்பாவும் பதறியடித்து ஓடி வருகின்றனர்.

ஹாஸ்பிடலுக்கு வரும் பாரதி கண்ணம்மா தான் கண்டிப்பாக குழந்தையை கடத்தியது என்று சொல்கிறார். அது எப்படி நாம் இத்தனை பேர் தேடியும் கிடைக்காத ஹேமா இவள் கையில் மட்டும் எப்படி சிக்குனா?? அப்போ இவள் தான் குழந்தையை கடத்தியிருக்கணும் என்று சொல்கிறார்.

அடுத்ததாக வெண்பா இதுதான் சமயம் என்று கண்ணம்மா மீது மொத்த பழியையும் தூக்கி போடுகிறார். இதனை குடும்பம் மொத்தமும் கோவமடைகிறது. இவ்வளவு நடந்தும் நீ திருந்தலயா?? என்று சொல்லியும் பாரதி தன் பேச்சிலேயே குறியாக இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here