விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி மெகா சங்கமத்தில் அடிதடியுடன் கூடிய பல காட்சிகள் இடம் பெற்றுள்ளது. மேலும் இன்னும் ஒரு போட்டியே இருக்கும் பட்சத்தில் யார் ஜெயிப்பார்கள் என்பது ட்விஸ்ட்டாக உள்ளது.
பாரதி கண்ணம்மா
சமையல் போட்டியில் கண்ணம்மா சமையல் போட்டியில் சமைத்த உணவில் கரப்பான் பூச்சி விழுந்ததால் அந்த போட்டியில் கலந்துக்கொள்ளாமல் இருந்து விட்டார். அவரின் நேர்மையை பார்த்து அவரை அடுத்த லெவெலுக்கு கொண்டு செல்கின்றனர் போட்டியாளர்கள்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் ஷிவாங்கி, பாலா மற்றும் புகழ் போன்றவர்களும் இதில் கலந்துகொண்டுள்ளனர். தற்போது வெண்பாவும், பாரதியும் பேசிகொண்டுள்ளனர். வெண்பா பேச்சு வாக்கில் பாரதியிடம் கரப்பான் பூச்சி விஷயத்தை உளறிவிடுகிறார். இதனால் கோவமடையும் பாரதி கண்டபடி கத்துகிறார்.
இப்படி குறுக்கு வழில எதுக்கு பண்ற. இதான் உன்கிட்ட எனக்கு பிடிக்காததே. இதை குழந்தைகள் சாப்பிட்டிருந்தால் அவங்க நிலைமை என்ன ஆகுறது என்றும் சொல்கிறார். அப்போ கொலை பண்ண கூட தயங்க மாட்டியா என்று பாரதி கேட்கிறார். கண்ணம்மாவை பழிவாங்க ஆள் வச்சு கொலை பண்ண தயங்க மாட்ட போல என்று வெண்பாவை சரமாரியாக கேள்வி கேட்கிறார் பாரதி
அதற்கு வெண்பா அமாம் இதுவரைக்கும் எத்தனை கொலை நான் பண்ணி இருக்கேன் என்று நினைத்து சிரித்துக்கொள்கிறார். அடுத்ததாக துளசி சௌந்தர்யாவிடம் பேச வேண்டும் என்று அழைக்கிறார். அப்பொழுது லட்சுமி வசதியாக வாழ வேண்டும் என்று ஆசை படுகிறார் என்றும் அவரை நீங்களே வளர்த்தால் என்ன என்றும் கேட்கிறார்.
பொய்களை கேட்க விரும்பினால் டிவியில் மோடி பேச்சை கேளுங்க’ – ராகுல் விமர்சனம்!!
ஆனால் சௌந்தர்யாவிற்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. கண்ணம்மா இப்படி அடம்பிடித்தால் என்ன செய்ய முடியும் என்று கேட்கிறார். அதன் பிறகு 2 ரவுடிகள் பெண்களிடம் தகராறு செய்கின்றனர். அப்பொழுது கண்ணம்மாவும், சந்தியாவும் அவர்களை அடித்து அங்கிருந்து துரத்துகின்றன. சந்தியா அதனை சரவணனிடம் சொல்ல கண்ணம்மாவை பார்க்க வருகிறார்.
அப்பொழுது அந்த ரவுடி இன்னும் நிறைய ஆள்களை அழைத்து வருகிறார். சரியான சமயத்தில் சரவணன் வந்து கண்ணம்மாவை காப்பாற்றுகிறார். பாரதியும் அங்கு வர அவரும் ரௌடிகளை அடித்து துவம்சம் செய்கிறார். கண்ணம்மா தனக்காக சண்டை போடும் பாரதியை பார்க்கிறார். பாரதி கோவமாகி அங்கிருந்து செல்கிறார். இதனை கேள்விப்பட்ட சௌந்தர்யா சந்தோஷமாகிறார். அடுத்ததாக சந்தியா சரவணன் சண்டை போட்டதற்கு அவரை பாராட்டுகிறார்.
மேலும் சரவணனின் அப்பா சந்தியா செய்த அல்வாவை புகழ பார்வதிக்கு ஆத்திரமாகிறது. மேலும் சந்தியாவும், கண்ணம்மாவும் ஒன்றாக இருப்பதும் பார்வதிக்கு பிடிக்கவில்லை. அடுத்து இந்த போட்டியில் ஜெயிக்க போவது சந்தியாவா?? கண்ணம்மாவா?? என்பது தான் பெரிய ட்விஸ்ட்.