பாரதி கண்ணம்மா சீரியல் மத்தியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் தற்போது வில்லியாக நடிக்கும் வெண்பா முதன்முதலாக தன் அம்மாவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகட்டடம் வைரலாகி வருகிறது.
பாரதி கண்ணம்மா வெண்பா
பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா துர்காவையே ஏமாற்றிவிட்டு தப்பித்து ஓடி விட்டார். மேலும் பல விறுவிறுப்பான சம்பவங்களுடன் பாரதி கண்ணம்மா சீரியல் நகர்ந்து கொண்டுள்ளது. கண்ணம்மாவிற்கு ஹேமா தான் தன் குழந்தை என்ற உண்மை எப்பொழுது தெரிய வரும் என்று பலரும் காத்துக்கொண்டுள்ளனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதிலும் முக்கியமாக வெண்பா போல ஒரு வில்லியை இதுவரையிலும் எந்த சீரியலிலும் பார்த்திருக்க மாட்டோம். அந்த அளவிற்கு பயங்காரமான ஒரு வில்லியாக இருக்கிறார். மேலும் மக்கள் பலரும் விரும்பும் ஒரு நடிகையாகவும் இருக்கிறார். தனது 9 வருட போராட்டதிற்கு பிறகு மக்கள் மத்தியில் இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.
பாரதியையும், கண்ணம்மாவையும் பிரிப்பது தான் வெண்பாவின் முதல் வேலையே. எப்படியாவது பாரதியை திருமணம் செய்து விட வேண்டும் என்று போராடி வருகிறார். அப்படி தான் கண்ணம்மாவை பலமுறை கொல்ல துணிந்தார். இந்த விசயம் எல்லாம் தெரிந்தால் பாரதி நிலைமை என்னாகுமோ என்ற பலரும் அவள் உள்ளனர்.
கொரோனாவிற்கு எதிரான 2டிஜி தடுப்பு மருந்து – பயன்பாட்டிற்கு எப்போது??
இப்படி கதையை விறுவிறுப்பாக்கும் வில்லியான வெண்பா தனது அம்மாவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் வெண்பாவிற்கு தங்கச்சி மாதிரி இருக்காங்களே என்று ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.