பாரதி கண்ணம்மா சீரியலில் ஹேமாவை தேடி பாரதி வீட்டில் பலர் தேடியும் கண்ணம்மா கையில் சிக்குகிறார். பல போராட்டங்களை தாண்டி ஹேமாவை மீட்கிறார்.
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது எதிர்பாராத விதமாக பல திருப்பங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் தான் கண்ணம்மா தெரு முழுக்க ஹேமாவை தேடி அழைகிறார். பாரதியும் ஒரு பக்கம் அலைய, வெண்பாவிற்கு ஒரு வித பயம் ஏற்படுகிறது.
அதாவது ஹேமா தன்னை காட்டி கொடுத்து விடுவாளோ என்ற உள்ளூர பயம் இருந்துகொண்டே உள்ளது. இதனால் பாரதி கையில் சிக்காமல் இருக்க வெண்பா அவருடனேயே சுற்றி வருகிறார். ஆனால் கண்ணம்மா ஹேமா சிக்கி இருக்கும் கார் அருகே வர டிக்கியில் ஹேமாவின் துணி இருப்பதை பார்த்து விடுகிறார்.
இது கண்டிப்பாக ஹேமா தான் என்று கத்துகிறார். டிக்கியை திறக்க வராததால் என்ன செய்வது என்று அலைமோதுகிறார். அப்பொழுது கார் ஓனர் அங்கு வர டிக்கியை திறக்கிறார். அப்பொழுது பார்த்து வெண்பாவின் ஆட்களும் அங்கு வந்த்து விடுகின்றனர்.
ஹேமாவை கண்ணம்மா தூக்க கண்ணம்மாவை மிரட்டுகின்றனர். கண்ணம்மா ஹேமாவை இருக்கமாக பிடித்து இருக்க ரௌடிகள் கண்ணம்மாவை அடிக்கின்றனர். கண்ணம்மாவின் அப்பா சண்முகத்தையும் தள்ளிவிட்டு அடிக்கின்றனர். அப்பொழுது அருகில் இருக்கும் பெண்கள் அனைவரும் ஒன்று கூடுகின்றனர்.
கண்ணம்மாவை காப்பாற்ற அந்த ரௌடிகளை அடித்து நொறுக்குகின்றனர். கண்ணம்மா ஹேமாவை எழுப்ப திடீரென அவருக்கு வலிப்பு வருகிறது. கண்ணம்மா விரைவாக ஹேமாவை காரில் அழைத்து செல்கிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.