பாரதி கண்ணம்மா – ஹேமாவின் அம்மா வெண்பா எங்கே என பாரதியிடம் கேட்கும் லட்சுமி – உண்மை வெளிவருமா??

0

பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைக்கு ஹேமா ஸ்கூலில் பெற்றோர்கள் மீட்டிங்கிற்காக அழைக்கின்றனர். கண்ணம்மா ஸ்கூலுக்கு செல்ல மறுக்க துளசி வற்புறுத்தி அனுப்பி வைக்கிறார்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது வெண்பாவை துர்கா கடத்தி வைத்துள்ளதை அடுத்து எப்படி தப்பிக்கலாம் என்று பலவாறு போராடி வருகிறார். அதன் பிறகு ஹேமாவும், பாரதியும் ஸ்கூலுக்கு வருகின்றனர். அடுத்ததாக லட்சுமி பாரதியிடம் வந்து அமர்கிறார்.

உங்க அம்மா எங்கே என்று கேட்க அவருக்கு வேலை இருப்பதாக சொல்கிறார். அடுத்து பாரதி லட்சுமியிடம் விளையாடிக்கொண்டுள்ளார். அப்பொழுது கண்ணம்மா வர பாரதியும் லக்ஷ்மியும் அங்கு அமர்ந்திருப்பதை பார்த்து சந்தோஷமடைகிறார். அடுத்ததாக ஸ்கூல் நிர்வாகம் வந்து குழந்தையை பற்றி பேசுகின்றனர்.

#MIvsRR ஐபிஎல் போட்டி – வெற்றிக்காக போராடும் இரு அணிகள்!வெல்லப்போவது யார்?

சம்பாதிக்கிறேன் என்ற பெயரில் குழந்தையை கவனிக்காமல் இருக்கின்றனர் என்று சொல்ல கண்ணம்மாவிற்கு லக்ஷ்மியை தான் சரியாக கவனிக்காதது நினைவிற்கு வருகிறது. ஒரு பக்கம் ஹேமா தனக்கு அம்மா தான் இல்லையே என்று நினைத்து வருத்தப்படுகிறார்.

இந்த பக்கம் லட்சுமி தனக்கு அப்பா இல்லையே என்று நினைத்து வருத்தப்படுகிறார். அடுத்ததாக பாரதி ஹேமாவையும் லட்சுமியையும் அழைத்து நன்றாக படிக்க வேண்டும் என்று அட்வைஸ் கொடுக்கிறார். ஹேமாவை போட்டோ எடுப்பதற்காக அழைத்து செல்கின்றனர்.

அப்பொழுது லட்சுமி ஹேமாவின் அம்மா வெண்பா ஏன் வரவில்லை என்று கேட்க பாரதிக்கு ஷாக்காகிறது. எதுவும் சொல்ல வேண்டாம் என்று நினைத்து கொண்டு அவருக்கு வேலை இருப்பதாக சொல்கிறார். அடுத்ததாக லக்ஷ்மியை பாரதி  டீச்சரிடம் அழைத்து செல்கிறார். லக்ஷ்மியை பற்றி விசாரிக்க வாயாடி என்றும்,படிப்பில் கெட்டிகாரி என்றும் சொல்கின்றனர்.

அடுத்ததாக பாரதிக்கு ஹாஸ்பிடலில் இருந்து கால் வர சென்று விடுகிறார். அடுத்து ஹேமா பாரதியை தேடிக்கொண்டுள்ளார். ஆனால் அவரை காணாததால் கண்ணம்மா ஹேமாவை அழைத்துக்கொண்டு டீச்சரிடம் செல்கிறார். ஹேமா நன்றாக படிப்பதாகவும், அமைதியான பெண் எனவும் சொல்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here