‘இனிமேல் தப்பிக்க முயற்சி பண்ணா தூக்குல தொங்க விட்ருவேன்’ – வெண்பாவை அணு அணுவாக சித்ரவதை செய்யும் துர்கா!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா தப்பிப்பதற்காக என்னென்னவோ வேலைகளை செய்ய கடைசியில் துர்காவிடம் மாட்டி கொள்கிறார்.

பாரதி கண்ணம்மா

நேற்றைய எபிசோடில் வெண்பா ஒரு பேப்பரில் தன்னை காப்பாற்றும்படி எழுதி கீழே போட அது துர்கா கையில் சிக்குகிறது. இதனால் மேலே வந்து துர்கா வெண்பாவை மிரட்டி விட்டு செல்கிறார். மேலும் இன்னொரு தடவை இதே போல செய்தால் கண்டிப்பாக தூக்குல தொங்க விட்ருவேன் என்று மிரட்டி விட்டு செல்கிறார்.

மேலும் சாப்பிட எதுவும் தர மாட்டேன் என்றும் கூறுகிறார். அடுத்ததாக சுமதி வீட்டில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் கண்ணம்மாவிற்கு தெரிய வர பணம் கொடுத்து உதவி செய்கிறார். அடுத்ததாக சௌந்தர்யா ஹேமாவிற்கு சொல்லி கொடுத்து கொண்டிருக்கிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஹேமாவிற்கு கணக்கு பாடம் சரியாக வராததால் சௌந்தர்யா தினமும் சொல்லி தருவதாக சொல்கிறார். அப்பொழுது லட்சுமியும் தன்னுடன் காரில் வந்ததாக சொல்கிறார். பாரதி கண்ணம்மாவை பார்த்து இருப்பானோ என்று சௌந்தர்யா பயந்தே விட்டார்.

‘இனிமேல் தப்பிக்க முயற்சி பண்ணா தூக்குல தொங்க விட்ருவேன்’ – வெண்பாவை அணு அணுவாக சித்ரவதை செய்யும் துர்கா!!

லட்சுமியும் தானும் ஒரே நாளில் தான் பிறந்துள்ளதாக சொல்கிறார் ஹேமா. அடுத்ததாக கண்ணம்மா புக்ஸ் படித்துக்கொண்டிருக்க அதில் பணம் கொடுத்து உதவுவதை விட வாழ வழி காட்டுவது தான் ஒருவருக்கு செய்யும் பெரிய உதவி என்று அந்த புக்கில் இருக்க அப்பொழுது சுமதிக்கு எதாவது ஒரு உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். இதனை துளசியிடமும் சொல்கிறார். அப்பொழுது சுமதியும் வருகிறார். சுமதிக்கு கண்ணம்மாவும், துளசியும் மாறி மாறி ஆறுதல் சொல்ல அவருக்கும் ஒரு தைரியம் வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here