பாரதி கண்ணம்மா சீரியலில் ஹேமா கடத்தப்பட்டதை அடுத்து அங்கிருந்து தப்பித்து செல்ல பாரதியும் அங்கு வந்து விட ஆனால் ஹேமாவை அவர் பார்க்கவே இல்லை. மேலும் இன்றைய எபிசோடு கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒரு செயலாக இருந்ததால் பலரும் கடுப்பாகியுள்ளனர்.
பாரதி கண்ணம்மா
ஹேமா குட்டி சுவரின் பின்னால் ஒளிந்துகொள்ள அந்த இடத்திற்கும் ரவுடிகள் வந்து விடுகின்றனர். அங்கிருந்து தப்பித்து செல்லும் ஹேமா எப்படியோ வந்து ரோட்டிற்கு வந்து விடுகிறார். ஆனால் அங்கு மனிதர்கள் நிறைய பேர் இருக்க யாருமேவா?? ஹேமாவை காப்பாற்றவில்லை.
சுற்றி அவர்கள் அனைவரும் வேலை பார்த்துக்கொண்டிருக்க ஹேமாவை ரவுடிகள் துரத்துவதும் அதே சமயம் ஹேமா ஒளிந்து கொள்வதையும் அனைவரும் பார்க்க தான் செய்கின்றனர். இது கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒரு செயலாகவே உள்ளது. பாரதியும் அந்த இடத்திற்கு வந்து விட அவரை பார்த்ததும் அப்பா என்று கத்தி இருந்தால் கண்டிப்பாக அவர் வந்திருப்பார்.
மேலும் காருக்கு பின்னால் அப்பா என்று கத்தி கொண்டே ஓடுகிறார் ஹேமா. அப்பொழுது கூட பாரதிக்கு கேட்கவில்லை. மேலும் அங்கிருந்த யாரும் காரை நிறுத்தவும் இல்லை. அடுத்ததாக அகிலன், சௌந்தர்யா மற்றும் கண்ணம்மா அனைவரையும் ஹேமாவை தேடி கிளம்புகின்றனர்.
அப்பொழுது ஹேமா அருகில் வந்து விட்டார் கண்ணம்மா. ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவே இல்லை. மேலும் பாரதி கண்ணம்மாவை வெளியே எடுத்ததற்காக சௌந்தர்யாவிடம் கோவப்படுகிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்