பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பாரதி கண்ணம்மா வீட்டிற்கு சென்று கோவமாக திரும்பி வருகிறார். நடந்தவற்றை சொல்ல சௌதர்யா முதன்முறையாக கண்ணம்மா மீது கோவமடைகிறார்.
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது ஹேமா உடல்நிலை சரியில்லாத நிலையில் கண்ணம்மா மட்டும் தான் ஒரே தீர்வு என்று பாரதி அவரின் வீட்டிற்கு வந்து கேட்கிறார். ஆனால் கண்ணம்மாவோ ஏன் நான் உங்க வீட்டுக்கு வரணும், உங்களுக்கு தேவைன்னா ஹேமாவை வந்து இங்க விடுங்க நான் பாத்துக்குறேன் என்று சொல்கிறார்.
இதனால் கோவமடையும் பாரதி அங்கிருந்து கிளம்புகிறார். வீட்டில் சௌந்தர்யா மற்றும் வேணு கண்ணம்மா வீட்டிற்கு வருவாளா?? என்று புலம்பி கொண்டிருக்கின்றனர். அப்பொழுது பாரதி கோவமாக வர அப்பொழுது நடந்தவற்றை சொல்ல சௌந்தர்யா இத்தனை வருடங்களுக்கு பிறகு கண்ணம்மா மீது கோவமடைகிறார்.
அவளோ திமிரா அவளுக்கு என்று சொல்கிறார். வேணு இவர்களை நினைத்து கோவம் கொள்கிறார். ஏன் கண்ணம்மா இங்க வரணும், ஹேமா அங்க போய் இருக்குறதுல என்ன பிரச்சனை என்று சொல்கிறார். அடுத்ததாக பாரதி ஹேமாவை நினைத்து கண்கலங்குகிறார். தன் வாழ்க்கைக்கு கிடைத்த அர்த்தமே நீ தான் என்று ஹேமாவிடம் கூறுகிறார்.
ஹேமா தூங்கி கொண்டிருக்க திடீரென சமையல் அம்மா எப்போ வருவீங்க என்று புலம்புகிறார். இதனை பாரதியால் தாங்க முடியவில்லை. அதன் பிறகு பாரதி கண்ணம்மாவை நினைத்து சௌந்தர்யாவும் வேணுவும் புலம்பி கொண்டுள்ளனர். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்