‘உன்னை கர்ப்பமாக்கி குழந்தைக்கு வருண் தான் காரணம்னு பாரதிகிட்ட சொல்லி அசிங்க படுத்துவேன்’ – வெண்பாவை கொடுமைப்படுத்தும் துர்கா!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது வெண்பாவை துர்கா கடத்தி வைத்துள்ளார். மேலும் இன்னும் ஒரு மாதத்தில் பாரதியையும் கண்ணம்மாவையும் சேர்த்து வைத்து காட்டுவதாக சவால் விடுகிறார்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியையும் கண்ணம்மாவையும் நிம்மதியாக வாழ விடமாட்டேன் என்று வெண்பா சொல்ல அதனை துர்கா கேட்டு விடுகிறார். இதனால் கோவமடைந்து துர்கா வெண்பாவை கடத்தி விடுகிறார். வெண்பா யார் என்றே தெரியாமல் பதறுகிறார்.

கண்ணை கழட்டியதும் தான் துர்கா என்று வெண்பாவிற்கு தெரிகிறது. ஏன் கண்ணம்மாவையும் பாரதியையும் ஏன் வாழ விடமாட்டேங்குற என்று கேட்க வெண்பா அதனை தான் விளையாட்டுக்கு சொன்னதாக சொல்கிறார். இதெல்லாம் நம்புவதாக இருக்கிறதா?? என்று கோவமடைகிறார். என்னை எதையும் பண்ணிடாதே என்று கெஞ்சுகிறார்.

மேலும் துப்பாக்கி எடுத்து சுடுவதற்காக செல்கிறார். அடுத்ததாக ஹாஸ்பிடலை இழுத்து மூடுவதற்கு வெண்பாவிடம் எழுதி வாங்குகிறார். வெண்பா கையெழுத்தை மாற்றிப்போட துர்கா கண்டுபிடித்து விடுகிறார். அடுத்து மிரட்டி கையெழுத்து போட வைக்கிறார். அடுத்ததாக வெண்பாவை கட்டிப்போட்டு இன்னும் 1 மாதம் இங்கு தான் இருக்க போகிறாய் என்று சொல்ல வெண்பா கத்துகிறார்.

அடுத்து சுமதி நீண்ட நாட்களுக்கு பிறகு ரீஎன்ட்ரி கொடுக்கிறார். கண்ணம்மா சுமதியை பார்க்க செல்கிறார். அடுத்து வெண்பா துர்காவிடம் தன்னை விட்டுவிடும் படும் கெஞ்சுகிறார். அடுத்து துர்கா வருண் என்று கத்துகிறார். இதனால் வெண்பா ஷாக்காகிறார். அடுத்து வருணை வைத்து தான் அப்பாவி கண்ணம்மாவை இவ்வோளோ கொடுமை படுத்துற என்று சொல்ல மறுபடியும் வெண்பா கெஞ்சுகிறார்.

மேலும் ஒரு மாதம் முழுக்க நீ இங்க தான் இருப்ப, எனக்கு எப்படி மூடு மாறும்னு தெரியாது. நான் ஏதாச்சும் பண்ணி அதனால நீ வாந்தி எடுத்து அந்த குழந்தையை நான் டெஸ்ட் எடுத்து இதுக்கு காரணம் நான் இல்லை, அந்த வருண் தான் என்று பாரதிக்கிட்ட ரிப்போர்ட் காட்டுவேன்.

உன்ன அசிங்கப்படுத்துவேன். பாரதியையும் கண்ணம்மாவையும் இன்னும் 1 மாசத்துல சேர்ந்து வச்சு காட்றேன். நீ பண்ணதெல்லாத்தையும் நிரூபிச்சு நீ டாக்டர் தொழிலே பண்ணவிடாம பண்றேன் என்று மிரட்டுகிறார். மேலும் இதில் பெரிய ட்விஸ்ட்டே பாரதி வீட்டிற்கு பின்னால் தான் துர்கா அவரை கடத்தி வைத்துள்ளார் துர்கா. வெண்பா பாரதி என்று கத்துகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here