கண்ணம்மா ஹேமாவிற்கு ஊட்டி விடுவதை பார்த்து கோவமடையும் லட்சுமி – பல பாச போராட்டங்களுடன் ‘பாரதி கண்ணம்மா’!!

0

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில் டிஎன்ஏ ரிப்போர்ட் வெண்பாவிற்கு கிடைத்து விடுகிறது. அதனை பெற்ற பின்பு தான் வெண்பா மிகவும் சந்தோசமாக இருக்கிறார். பின், கண்ணம்மா ஹேமாவுக்கு ஊட்டி விடுவதை பார்த்து லட்சுமி கோபமடைகிறார்.

“பாரதி கண்ணம்மா” சீரியல்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாரதி கண்ணம்மா” சீரியலில் இன்று வெண்பா ஆட்டோக்காரர் குமாரை பின் தொடர்ந்து செல்கிறார். அவரிடம் தான் பாரதியின் டிஎன்ஏ ரிப்போர்ட் இருக்கிறது. இதனை அடுத்து, அப்போது குமாருக்கு கண்ணம்மா போன் செய்து தனக்கு ஒரு வேலை இருப்பதாகவும் உடனடியாக வர முடியுமா? என்றும் கேட்கிறார்.

தடுப்பூசி போட்டுகொண்டால் மூக்குத்தி, சோப்பு, தக்காளி, ஜூஸ் இலவசம் – மாநில அரசின் புதிய யுக்தி!!

அப்போது அவர் லட்சுமி தன்னிடம் டிஎன்ஏ ரிப்போர்ட்டை ஹேமாவிடம் கொடுக்க சொல்லி இருப்பதாகவும், அதனை கொடுக்க வீட்டிற்கு செல்வதாகவும் தெரிவிக்கிறார். கண்ணம்மா அவரை நேரடியாக அதனை பாரதியிடம் கொடுத்து விடுமாறு கூறுகிறார். பின், அவரும் பாரதியின் மருத்துவமனைக்கு செல்கிறார். அங்கு பாரதியிடம் கொடுத்தும் விடுகிறார். பின், பாரதி வெண்பாவிற்கு போன் செய்து ரிப்போர்ட்டை வந்து வாங்கி கொள்ளுமாறு கூறுகிறார்.

சரியாக, பாரதி அந்த ரிப்போர்ட்டை பிரித்து பார்க்க போகும் போது வெண்பா வந்து விடுகிறார். இதனால் அந்த ரிப்போர்ட்டை பாரதி பிரித்து பார்க்காமல் கொடுத்து விடுகிறார். பின், ஸ்கூலில் ஹேமா மற்றும் லட்சுமி இருவரும் சாப்பாடிற்காக உட்கார்ந்து இருக்கிறார்கள். அப்போது கண்ணம்மா இருவரும் ஒன்றாக இருப்பதனை பார்த்து சாப்பாடு கொண்டு போய் கொடுக்க தயங்குகிறார். பின், லட்சுமியை அமைதியாக இருக்க சொல்லி விட்டு ஹேமாவிற்கு உணவினை அளிக்கிறார்.

அப்போது ஹேமா ஒரு மாதிரி டல்லாகி விடுகிறார். இது குறித்து கண்ணம்மா கேட்கும் போது இன்று ஒரு நாள் மட்டும் தான் சமையல் அம்மா சாப்பாட்டினை சாப்பிட வேண்டும் என்று தனது தந்தை கூறி இருப்பதாக சொல்கிறார். அதற்கான காரணத்தை லட்சுமி கேட்கும் போது ஹேமா “அவுங்க செய்றது சுத்தமாக இருக்குமானு தெரியாது” என்று கூறிவிடுகிறார். இதனால் லட்சுமிக்கு மிகவும் கோபம் வந்து விடுகிறார். “சமையல் அம்மா இந்த ஸ்கூலில் எல்லாருக்கும் செய்கிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அது எப்படி அப்படி பேசலாம்” என்று கேட்டு விடுகிறார். அதன் பின் ஹேமாவிற்கு கண்ணம்மா ஊட்டி விடுவதை பார்த்து லக்ஷ்மிக்கு என்னவோ போல ஆகி விடுகிறது. இதனால் கோவமடைகிறார். கண்ணம்மாவிற்கு லக்ஷ்மியின் நிலை புரிந்தாலும் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறார். பின், ஹேமா லட்சுமிக்கு அவரது அம்மா சாப்பாடு கொண்டு வரவில்லை என்றும், அவளுக்கு ஊட்டி விடுங்கள் என்று கூறி விடுகிறார். இதனை அடுத்து கண்ணம்மா இருவருக்கும் ஊட்டி விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசொட் முடிந்து விடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here